அரசு வக்கீலை மாற்ற முதல்வருக்கு நெருக்கடி?
அரசு வக்கீலை மாற்ற முதல்வருக்கு நெருக்கடி?
அரசு வக்கீலை மாற்ற முதல்வருக்கு நெருக்கடி?
டி.என்.ஏ., பரிசோதனை
இதனால், தர்ஷன் உட்பட 17 பேரும், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் இன்று அடைக்கப்பட வாய்ப்புள்ளது. நேற்று மாலை 17 பேருக்கும் மருத்துவ பரிசோதனை, டி.என்.ஏ., பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த வழக்கில் அரசு சார்பில் வாதாட, மூத்த வக்கீல் பிரசன்ன குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.
118 பொருட்கள்
இதற்கிடையில், இந்த வழக்கில் சாட்சியங்களை சேகரிக்கும் வகையில், நடிகர் தர்ஷன் உட்பட 17 பேரும் அணிந்திருந்த உடைகள், ஷூ, ரேணுகாசாமியை தாக்க பயன்படுத்தப்பட்ட இரும்பு கம்பி, பெல்ட் உட்பட 118 பொருட்களை போலீசார் சேகரித்து வைத்துள்ளனர்.
6 அதிகாரிகள்
இந்த வழக்கில் யாரையும் தப்ப விடக்கூடாது என, பெங்களூரு போலீஸ் கமிஷனர் தயானந்தா, போலீஸ் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளார். வழக்கு விசாரணை, மேற்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் கிரிஷ் தலைமையில் நடக்கிறது. விசாரணை அதிகாரியாக விஜயநகர் போலீஸ் உதவி கமிஷனர் சந்தன் உள்ளார்.
மனைவியிடம் ஆஜர்
ரேணுகாசாமியை கொலை செய்த பின்னர், பனசங்கரியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும், மனைவி விஜயலட்சுமி வீட்டிற்கு தர்ஷன் சென்றுள்ளார். கடந்த 9ம் தேதி விஜயலட்சுமி வீட்டில் நடந்த பூஜையில் பங்கேற்று உள்ளார். அதன்பின்னர் மைசூரு புறப்பட்டு சென்றது தெரியவந்துள்ளது.