ஜோடி தற்கொலை
பெங்களூரு புறநகர், பன்னரகட்டாவின், ஜனதா காலனியில் வசித்தவர்கள் பிரபு, 38, லட்சுமம்மா, 30. இவர்கள் திருமணம் செய்யாமல், சேர்ந்து வாழ்ந்தனர். சில நாட்களாக இவர்கள் வெளியே காணப்படவில்லை.
தொண்டர் மீது தாக்குதல்
தட்சிணகன்னடா லோக்சபா தொகுதியில், பா.ஜ., வேட்பாளர் கேப்டன் பிரிஜேஷ் சவுடா வெற்றி பெற்றதால், பெல்தங்கடியின், களெஞ்சா கிராமத்தில் குஷலப்பா கவுடா என்பவரின் வீட்டு முன்பாக, பா.ஜ., தொண்டர்கள் நேற்று காலை பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
இடி தாக்கி மூவர் பலி
ஹாசன், அரகலகூடின், தொட்டமக்கே கிராமத்தில் வசித்த முத்தம்மா, 70, புட்டம்மா, 60, நேற்று மாலை வயலில் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மழை பெய்ததால், மரத்தடியில் நின்றனர். இடி தாக்கியதில் இருவரும் உயிரிழந்தனர். மூவர் காயமடைந்து சிகிச்சை பெறுகின்றனர்.
செக்யூரிட்டி தற்கொலை
மைசூரு, நஞ்சன்கூடின், கல்மள்ளி தொழிற் பகுதியில் உள்ள, தொழிற்சாலையில் செக்யூரிட்டியாக பணியாற்றியவர் நஞ்சேஷ், 40. சமீபத்தில் தொழிற்சாலையில் திருடு போனது.