கடற்கரை சுற்றுலாவை மேம்படுத்த 'புளூ பிரின்ட்'
கடற்கரை சுற்றுலாவை மேம்படுத்த 'புளூ பிரின்ட்'
கடற்கரை சுற்றுலாவை மேம்படுத்த 'புளூ பிரின்ட்'

உகந்த சூழ்நிலை
பல மாநிலங்களுக்கு சுற்றுலா, முக்கிய வருவாய் ஆதாரமாக உள்ளது. குறிப்பாக, அண்டை மாநிலமான கேரளாவை போன்று, நம்மால் சுற்றுலா துறையை மேம்படுத்த முடியவில்லை. சுற்றுலா வளர்ச்சிக்கான 'புளூ பிரின்டை' தயாரிப்பது அவசியம்.
மாஸ்டர் பிளான்
மாவட்டம் வாரியாக சுற்றுலா தலங்கள் கணக்கெடுப்பு, பாதுகாப்பு போன்றவைக்கான 'மாஸ்டர் பிளான்' தயாரிக்க வேண்டும். மூன்று மாதங்களில் இப்பணியை முடிக்க வேண்டும். 320 கி.மீ., கடற்கரை கொண்ட கர்நாடகாவில், சுற்றுலாவுக்கு அதிக வாய்ப்பு உள்ளது. இதை போதுமான அளவு பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை.
தனித்திட்டம்
கடலோரம், மலை பகுதிகளுக்கு தனித்திட்டம் தயாரிக்க வேண்டும். கடலோர சுற்றுலாவின் சாத்தியக்கூறுகளை ஆராய வேண்டும். வரி வசூல் செய்ய, உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியும். வேலை தேடி வெளி மாநிலம், வெளி நாடுகளுக்கு செல்லும் கடலோர மாவட்ட மக்கள் நிலை மாற வேண்டும்.