3 கோடி வீடுகள் கட்ட நிதி ஒதுக்கீடு : மத்திய அமைச்சரவை ஒப்புதல்
3 கோடி வீடுகள் கட்ட நிதி ஒதுக்கீடு : மத்திய அமைச்சரவை ஒப்புதல்
3 கோடி வீடுகள் கட்ட நிதி ஒதுக்கீடு : மத்திய அமைச்சரவை ஒப்புதல்
UPDATED : ஜூன் 10, 2024 06:29 PM
ADDED : ஜூன் 10, 2024 06:24 PM

புதுடில்லி: மூன்றாவது முறையாக பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றப்பின் மத்திய அமைச்சரவை முதல் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் பிரதமர் அலுவலக இல்லத்தில் இன்று (ஜூன்10) நடந்தது. இதில் 71 அமைச்சர்களும் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் பிரதமரின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 3 கோடி வீடுகள் கட்ட நிதி ஒதுக்கிட மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
ஏற்கனவே 4.12 கோடி வீடுகள் கட்டப்பட்டுள்ள நிலையில் மேலும் 3 கோடி வீடுகள் நகர் மற்றும் ஊரமைப்பு பகுதிகளில் கட்டப்பட உள்ளது.