Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/ பரம்பரை சொத்துக்காக தந்தையை கொன்ற மகன்

பரம்பரை சொத்துக்காக தந்தையை கொன்ற மகன்

பரம்பரை சொத்துக்காக தந்தையை கொன்ற மகன்

பரம்பரை சொத்துக்காக தந்தையை கொன்ற மகன்

ADDED : ஜூன் 13, 2024 04:51 PM


Google News
நந்க் நாக்ரி: பரம்பரை சொத்து தகராறில் தந்தையை அடித்துக் கொன்ற மகனை போலீசார் கைது செய்தனர்.

வடகிழக்கு டில்லியின் நந்த் நாக்ரி பகுதியை சேர்ந்தவர் கேஹர் சிங், 65. இவரது மகன் அருண், 35. ஜி.டி.பி., மருத்துவமனையில் வேலை செய்து வருகிறார். ஆனால் ஒழுங்காக வேலைக்குச் செல்வதில்லை. மேலும் அருணுக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது.

கேஹர் சிங் பெயரில் இருக்கும் சொத்ததை தன்னுடைய பெயருக்கு மாற்றித் தரும்படி, அருண் தகராறு செய்து வந்துள்ளார். நேற்று முன்தினமும் இதுதொடர்பாக தகராறு செய்துள்ளார். இதற்கு கேஹர் சிங் மறுத்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த அருண், கட்டை, செங்கற்களால் தந்தையை அடித்துள்ளார். படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து அங்கு வந்த போலீசார், அவரை கைது செய்தனர்.

சம்பவம் நடந்தபோது, அருண் குடிபோதையில் இருந்துள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us