ADDED : மே 27, 2025 10:16 PM

மின்சாரம் மற்றும் கலப்பின வாகனங்களுக்குத் தேவையான உயர் மின்னழுத்த அமைப்புகளை கையாளுவதற்கான விரிவான பயிற்சி திட்டத்தை, ஐ.டி.ஐ., மாணவர்களுக்காக துவங்கியுள்ளதாக, மாருதி சுசூகி நிறுவனம் தெரிவித்து உள்ளது.
இத்திட்டம் நாடு முழுதும் உள்ள 24 மாநிலங்கள் மற்றும் நான்கு யூனியன் பிரதேசங்களில் உள்ள 130 ஐ.டி.ஐ.,க்களில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், இத்திட்டத்திற்காக 3.90 கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளதாக மாருதி தெரிவித்துள்ளது.