Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/வர்த்தகம்/பொது/ 'பசுமை தொழில்களை ஊக்குவிக்க தனி நிதி நிறுவனம் வேண்டும்'

 'பசுமை தொழில்களை ஊக்குவிக்க தனி நிதி நிறுவனம் வேண்டும்'

 'பசுமை தொழில்களை ஊக்குவிக்க தனி நிதி நிறுவனம் வேண்டும்'

 'பசுமை தொழில்களை ஊக்குவிக்க தனி நிதி நிறுவனம் வேண்டும்'

ADDED : டிச 01, 2025 12:42 AM


Google News
புதுடில்லி: சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத தொழில்களை ஊக்குவித்து, பசுமை பொருளாதாரத்தை மேம்படுத்த, தனி நிதி நிறுவனத்தை உருவாக்க வேண்டும் என, சி.ஐ.ஐ. எனும் இந்திய தொழில் கூட்டமைப்பு மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்து உள்ளது.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, பசுமை போக்குவரத்து மற்றும் கார்பன் உமிழ்வை குறைக்கும் நிறுவனங்களின் முயற்சிகளுக்கு, குறைந்த வட்டியில் கடன் வழங்கும் வகையில் இந்த நிறுவனம் உருவாக்கப்பட வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளது.

அடுத்தாண்டு தாக்கல் செய்யப்படவுள்ள மத்திய பட்ஜெட்டில், தொழில்துறையினரின் எதிர்பார்ப்புகள் குறித்து அரசுக்கு எழுதியுள்ள கடிதத்தில் இவ்வாறு தெரிவித்து உள்ளது.

வரும் 2070க்குள் இந்தியா நிகர பூஜ்ஜிய கார்பன் உமிழ்வு இலக்கை அடைய பெரும் முதலீடு தேவைப்படுவதாகவும், தற்போதைய முதலீடு போதுமானதாக இல்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், பழைய பேட்டரிகள் மற்றும் மின்னணு பொருட்களை மறுசுழற்சி செய்வதை கட்டாயமாக்க வேண்டும் என்றும், இதன் வாயிலாக அரிய வகை கனிமங்கள் ஏற்றுமதி செய்வதை தடுத்து, உள்நாட்டிலேயே பயன்படுத்த முடியும் என்றும் தெரிவித்துள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us