மே மாத இ - வே பில்கள் 10.31 கோடியாக அதிகரிப்பு
மே மாத இ - வே பில்கள் 10.31 கோடியாக அதிகரிப்பு
மே மாத இ - வே பில்கள் 10.31 கோடியாக அதிகரிப்பு
ADDED : ஜூன் 20, 2024 10:14 PM

புதுடில்லி:கடந்த மே மாதம் வழங்கப்பட்ட 'இ - வே' பில்களின் எண்ணிக்கை 10.31 கோடியாக அதிகரித்துள்ளது.
ஜி.எஸ்.டி., நடைமுறையின்படி, 50,000 ரூபாய்க்கு மேல் மதிப்புள்ள பொருட்களுக்கான, மாநிலத்துக்குள் மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்துக்கு, இ - வே பில் அவசியம்.
இ - வே பில்கள் அதிகரித்துள்ளது, நாட்டில் சரக்கு போக்குவரத்து அதிகரித்திருப்பதை உணர்த்துகிறது. மேலும், இது நாட்டின் வினியோக தொடர் வலுவாக இருப்பதன் பிரதிபலிப்பாகவும் பார்க்கப்படுகிறது.
இதுவரை அதிகபட்சமாக கடந்த மார்ச் மாதத்தில் தான், 10.35 கோடி இ - வே பில்கள் வழங்கப்பட்டன. கடந்த ஏப்ரலில் 9.66 கோடி பில்கள் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.