
கடைசியாக நடித்த படத்தில் நள்ளிரவு 2 மணிக்கு நடனமாடிய தர்மேந்திரா
“இந்த பாடல் காட்சி தர்மேந்திரா மற்றும் அவரது கல்லூரி நண்பர்கள் அனைவரும் மீண்டும் ஒன்று கூடும் ஒரு நிகழ்ச்சியில் பாடும் விதமாக படமாக்கப்பட்டது. அப்போது இரவு மணி இரண்டு இருக்கும். நடன கலைஞர்கள் அனைவரும் ஆடுவதற்கு தயாராக இருக்க தர்மேந்திரா என்னிடம் வந்து, இந்த நடனத்தில் நானும் இருக்கிறேனா என்று கேட்டார். அதற்கு அவரிடம் இது கொஞ்சம் கடினமான ஸ்டெப்ஸ்.. சில நிமிடங்கள் நின்று கொண்டே முன்னால் இருப்பவரின் தோள்களைப் பிடித்துக் கொண்டு சாய்ந்தவாறு ஆட வேண்டும்.. அது உங்களுக்கு சிரமமாக இருக்கும் என்று கூறினேன். ஏன் என்னால் அது முடியாதா என்று கூறி அதை சவாலாக எடுத்துக் கொண்டு அந்த காட்சியில் நடனம் ஆடினார் தர்மேந்திரா.. இந்த வயதிலும் கூட நடிப்புக்கான அவரது அர்ப்பணிப்பு உணர்வு என்னை ஆச்சரியப்படுத்தியது” என்று கூறியுள்ளார் நடன இயக்குனர் விஜய் கங்குலி.
























வாசகர்கள் கருத்துகள்
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!