/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ உள்ளாட்சி தேர்தலில் ஓட்டுச்சீட்டு அவசர சட்டம் அமல்படுத்த அரசு திட்டம் உள்ளாட்சி தேர்தலில் ஓட்டுச்சீட்டு அவசர சட்டம் அமல்படுத்த அரசு திட்டம்
உள்ளாட்சி தேர்தலில் ஓட்டுச்சீட்டு அவசர சட்டம் அமல்படுத்த அரசு திட்டம்
உள்ளாட்சி தேர்தலில் ஓட்டுச்சீட்டு அவசர சட்டம் அமல்படுத்த அரசு திட்டம்
உள்ளாட்சி தேர்தலில் ஓட்டுச்சீட்டு அவசர சட்டம் அமல்படுத்த அரசு திட்டம்
ADDED : செப் 10, 2025 02:06 AM
கர்நாடகாவின் உள்ளாட்சி தேர்தல்களில் மின்னணு இயந்திரத்துக்கு பதிலாக, மீண்டும் ஓட்டுச்சீட்டு கொண்டு வருவதற்காக, 11ம் தேதி நடக்கும் அமைச்சரவை கூட்டத்தில் அவசர சட்டத்துக்கு ஒப்புதல் பெற்று, நடைமுறைப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.
கடந்த 2024 லோக்சபா தேர்தலில் ஓட்டுத் திருட்டு நடந்ததாக, லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் குற்றஞ்சாட்டி வருகிறார். இது நாடு முழுதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அனைவரும் மின்னணு ஓட்டு இயந்திரத்தின் மீது நம்பிக்கை இழந்து வருவதாக கர்நாடக காங்கிரஸ் குற்றஞ்சாட்டியது. இதற்கு பா.ஜ.,வினர், 'சட்டசபை தேர்தலில் ஓட்டு இயந்திரம் மூலம் ஆட்சிக்கு வந்தீர்கள்; உங்கள் பதவியை ராஜினாமா செய்கிறீர்களா?' என்று முதல்வருக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர்.
பெங்களூரில் கடந்த 4ம் தேதி நடந்த அமைச்சரவை கூட்டத்தில், ஜி.பி.ஏ., மாநகராட்சிகள், பஞ்சாயத்துகள், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்களில், மின்னணு ஓட்டு இயந்திரத்துக்கு பதிலாக, ஓட்டுச்சீட்டுகளை பயன்படுத்த, மாநில தேர்தல் ஆணையத்துக்கு, அரசு பரிந்துரை செய்தது.
இதற்கு, கர்நாடக கிராம ஸ்வராஜ் மற்றும் பஞ்சாயத்துராஜ் சட்டம், கிரேட்டர் பெங்களூரு அதிகாரசபை சட்டம் - 2024, கர்நாடக நகராட்சி சட்டம் உட்பட மூன்று சட்டங்களில் திருத்தம் செய்யப்பட வேண்டும். செப்., 11ல் நடக்கும் அமைச்சரவை கூட்டத்தில் இதுகுறித்து முடிவு எடுக்கப்படும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மின்னணு ஓட்டு இயந்திரங்களுக்கு பதிலாக, ஓட்டுச்சீட்டுகளை பயன்படுத்துவது தொடர்பாக, சட்டத்திருத்தம் அவசியம். சட்டசபையின் மழைக்காலக் கூட்டத்தொடர் கடந்த மாதம் தான் முடிவடைந்தது. பெலகாவி குளிர்கால கூட்டத்தொடருக்கு முன்பு வேறு எந்த கூட்டத்தொடரும் நடைபெறாது.
எனவே, ஓட்டுச்சீட்டுகளை பயன்படுத்துவதற்கான சட்டங்களை திருத்தி, விதிகளை அமல்படுத்த ஒரு அவசர சட்டம் அவசியம் என்று அரசுக்கு சட்டம் மற்றும் நாடாளுமன்ற விவகாரத் துறை அதிகாரிகள் ஆலோசனை தெரிவித்துள்ளனர்.
மாநி ல அரசு, அவசர சட்டம் மூலம் சட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை எடுத்தாலும், கவர்னரின் ஒப்புதல் தேவை. கவர்னர் ஒப்புதலை பெற்ற பின், பொருத்தமான விதிமுறைகளை சேர்த்து, ஒரு அறிவிப்பை வெளியிட வேண்டும்.
பின், மாநில தேர்தல் ஆணையம் மூலம் நடக்கும் தேர்தல்களில், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களுக்கு பதிலாக, ஓட்டுச்சீட்டுகளை பயன்படுத்த வேண்டும். ஆனால், இது தொடர்பான அவசர சட்டங்களில் கவர்னர் கையெழுத்திடுவாரா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
ஓட்டுச்சீட்டில் நடக்கும் முறைகேடுகள் குறித்து நாட்டில் பல நீதிமன்றத்தில் வழக்குகள் நிலையில் உள்ளன. ஓட்டுச்சீட்டு நடைமுறையால், அதன் முடிவுகள் வெளிவர, இரண்டு முதல் மூன்று நாட்களாகும். இதன் மூலம், யார் ஆட்சியை பிடிப்பர் என்பது தெரிய, இரண்டு மூன்று நாட்களாகும். ஆனால், மின்னணு ஓட்டு இயந்திரம் மூலம் ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் அன்று மதியமே, யார் ஆட்சியை பிடிப்பர் என்பது தெரிந்துவிடும்.
இந்நிலையில், மாநில அரசு மீண் டும் பின்நோக்கி பயணம் செய்யும் விதமாக, ஓட்டுச்சீட்டுகளை பயன்படுத்த முடிவு செய்துள்ளது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
- நமது நிருபர் -