Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/விவசாய மலர்/செம்மண் நிலத்தில் ஜொலிக்கும் சின்னார்

செம்மண் நிலத்தில் ஜொலிக்கும் சின்னார்

செம்மண் நிலத்தில் ஜொலிக்கும் சின்னார்

செம்மண் நிலத்தில் ஜொலிக்கும் சின்னார்

PUBLISHED ON : பிப் 05, 2025


Google News
Latest Tamil News
செம்மண் நிலத்தில், சின்னார் பாரம்பரிய ரக நெல் சாகுபடி குறித்து, செங்கல்பட்டு மாவட்டம், பவுஞ்சூர் ஒன்றியம் அடுத்த நீலமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த நீலபூ.கங்காதரன் கூறியதாவது:

பாரம்பரிய ரக நெல் மற்றும் பயறு வகைகளை, எனக்கு சொந்தமான செம்மண் நிலத்தில் சாகுபடி செய்து வருகிறேன். அந்த வரிசையில், செம்மண் நிலத்தில்,சின்னார் பாரம்பரிய ரக நெல் சாகுபடி செய்துள்ளேன். இந்த நெற்கதிர் இளஞ்சிவப்பு நிறத்தில் ஜொலிக்கும்.

இது, 120 நாட்களுக்கு பின் அறுவடைக்கு வரும். இந்த ரகத்தின் நெல், ஏறக்குறைய பத்துக்கு பத்து நெல்லை போல நீளமாக இருக்கும். களர் உவர் நிலத்தை தவிர, அனைத்து விதமான நிலங்களிலும் சாகுபடி செய்யலாம்.

குறிப்பாக, இயற்கை சாகுபடிக்கு ஏற்ப, ரசாயனஉரங்களின் பயன்பாடு இல்லாமல், இயற்கை உரம் மற்றும் நீர் நிர்வாகத்தை முறையாக கையாண்டால், அதிக மகசூல் பெற முடியும்.

இவ்வாறு அவர்கூறினார்.



தொடர்புக்கு: நீலபூ.கங்காதரன்,

96551 56968






      Our Apps Available On




      Dinamalar

      Follow us