Dinamalar-Logo
Dinamalar Logo


/இணைப்பு மலர்/வாரமலர்/கவிதைச்சோலை - காதல் கவிதை!

கவிதைச்சோலை - காதல் கவிதை!

கவிதைச்சோலை - காதல் கவிதை!

கவிதைச்சோலை - காதல் கவிதை!

PUBLISHED ON : பிப் 11, 2024


Google News
Latest Tamil News
தோற்றுத்தான் போகிறது

என் பிடிவாதம்

உன் அன்பின் முன்!

கவிதை எழுத

காதல் தேவையில்லை

பெண்களின் அழகை

ரசிக்க தெரிந்தாலே போதும்!

உன் அன்பெனும்

எண்ணெய் வற்றாதவரை

நானுமோர்

சுடர்விட்டெரியும் விளக்கே!

உன்னை பிடித்துவிட்டதால்

இனி உனக்கு பிடிக்காதது

எனக்கும் பிடிக்காது!

விடுவிக்க முயன்றும்

தோற்றுப் போகிறேன்

உன் பார்வை பிடியிலிருந்து!

எனக்காக நீ விட்ட

ஒரு சொட்டு கண்ணீர்

உனக்காகவே

வாழவேண்டுமென்று

இதயத்தில்

உறைந்துவிட்டது!

கவிதை வரியின் சுவை

அர்த்தம் புரியும் வரையிலாம்

உன் விழிக்கவிதையின்

அர்த்தம் புரிந்தபின்னே

நான் சுவைக்கவே

ஆரம்பித்தேன்!

— ச. துளசி ராம், ராமநாதபுரம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us