Dinamalar-Logo
Dinamalar Logo


தீர்வு

தீர்வு

தீர்வு

ADDED : அக் 04, 2024 09:14 AM


Google News
பலவித பிரச்னைகளால் சிக்கித் தவித்தான் முபாரக். அதை சிந்தித்தபடி நடந்து சென்ற போது இரு மனிதர்கள் பேசுவது காதில் விழுந்தது.

''நான் இரண்டு நாளாக துாங்கவில்லை. நீங்கள் கொடுத்த ஆடுகள்தான் அதற்கு காரணம்'' என்றான் ஒருவன்.

அதற்கு மற்றொருவன், ''அவசர வேலையாக சென்றதால் தான் ஆடுகளை ஒப்படைத்தேன்'' என்றான்.

'' நள்ளிரவு வரை ஆடுகள் கத்திக் கொண்டே இருந்தன. ஆனால் அதிகாலையில் தானாகவே அமைதியாயின'' என்றான்.

இதைக் கேட்டதும் முபாராக்கின் மனம் தெளிந்தது. ஆட்டைப் போலத் தானே எனக்கு ஏற்பட்டுள்ள பிரச்னைகளும். அது தானாகவே முடிவுக்கு வரும் வரை அமைதியாக இருக்க வேண்டும் என முடிவெடுத்தான்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us