Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/விவேகானந்தர்/எல்லாரும் நம் சகோதரரே!

எல்லாரும் நம் சகோதரரே!

எல்லாரும் நம் சகோதரரே!

எல்லாரும் நம் சகோதரரே!

ADDED : மே 28, 2013 10:05 AM


Google News
Latest Tamil News
* எறும்பும், தேவதூதனும் ஒன்று தான். புழுவும் கூட கடவுளின் உடன்பிறப்பே. எந்த உயிரிடத்தும் உயர்வோ, தாழ்வோ இல்லை.

* நமது உள்ளங்களை நம் எப்போதும் திறந்து வைத்திருந்தால் பிரபஞ்சத்தில் உள்ள நல்ல நினைவுகள் அனைத்திற்கும் உரிமையுள்ளவர்களாகி விடுவோம்.

* அன்பே உலகில் மேலானது. யோகப்பயிற்சியை விட அன்பே உயர்ந்தது.

* பிறரைத் துன்புறுத்துவது எளிது. எழுகின்ற கையைத் தாழ்த்தி அமைதியாய் நிற்பது மிகவும் கடினமானது.

* மனிதன் பிறந்திருப்பது இயற்கையை வெல்வதற்காகவே. அதற்குப் பணிந்து போவதற்கு அல்ல.

* இந்த மண்ணுலகம் பெரிய பயிற்சிக்கூடம். நம்மை வலிமையுள்ளவர்களாக்கிக் கொள்வதற்காகவே இங்கு நாம் அனைவரும் வந்திருக்கிறோம்.

* வழிபாட்டில் கடவுளை நம் பெற்றோராக ஏற்றுக் கொண்ட பிறகு, அன்றாட வாழ்வில் சந்திக்கும் அனைவரையும், நம் சகோதரர்களாக ஏற்க தயங்கக்கூடாது.

- விவேகானந்தர்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us