Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/காஞ்சி பெரியவர்/குழந்தை மனதுடன் இருங்கள்

குழந்தை மனதுடன் இருங்கள்

குழந்தை மனதுடன் இருங்கள்

குழந்தை மனதுடன் இருங்கள்

ADDED : ஆக 10, 2012 09:08 AM


Google News
Latest Tamil News
* நாம் இந்த உலகத்தை விட்டுப் போவதற்குள், 'என்னிடம் பாவமூட்டை இல்லை' என்று சொல்லும்படி செய்து கொண்டு விட வேண்டும். அந்த நிலையை அடைந்துவிட்டால் எப்போதும் ஆனந்தமாக இருக்கலாம்.

* நம் துக்கங்களை எல்லாம் ஞானம் என்னும் தண்ணீரில் அமுக்கிவிட வேண்டும். அப்போது தண்ணீருக்குள் மூழ்கிய குடம்போல மனம் லேசாகி விடும்.

* எமன் ஒரு நொடிப்பொழுதைக் கூட வீணாக்குவதுஇல்லை. தினமும் நம்மை நெருங்கி வந்து கொண்டிருக்கிறான். எப்போது நம்மைப் பிடித்துக் கொள்வான் என்று தெரியாது. கோவிந்தனின் காலைக் கட்டிக் கொண்டால் என்றும் பயமில்லை.

* குழந்தையும் தெய்வமும் ஒன்று தான். குழந்தைகளிடம் காமகுரோத சிந்தனைகள் உண்டாவது இல்லை. 'குழந்தையாக இரு' என்ற உபநிடதம் நமக்கு உபதேசிக்கிறது.

* துன்பத்தை மற்றவர்களிடம் எல்லாம் சொல்லிப் பயனில்லை. அவர்கள், அதை எப்படி எடுத்துக்கொள்வார்களோ தெரியாது. கடவுளிடம் சொல்லி முறையிட்டால் நிச்சயம் அது தீர்ந்து விடும்.

- காஞ்சிப்பெரியவர்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us