ADDED : ஆக 05, 2012 10:08 AM

* அன்பு யாரைக் குறித்து வைக்கப்படுகிறது என்பதைப் பொறுத்து வேறுவேறு பெயர்கள் உண்டு. சமவயதினரிடம் வைக்கும் அன்புக்கு 'சிநேகிதம்'.
* பெரியவர்களிடம் வைக்கிற அன்பு 'மரியாதை'. குழந்தையிடம் வைக்கும் அன்பு 'வாத்ஸல்யம்'. நாயகன், நாயகி இருவரும் அன்பு கொள்வது 'சிருங்காரம்'. நம் மாதிரி சாதாரணப்பட்டவர்கள் நம்மைவிட கஷ்டப்படுகிறவர்களிடம் வைக்கிற அன்புக்குப் 'பரிவு' என்று பெயர்.
* நம்மைவிட மகாபெரியவர்கள் நம்மிடம் வைக்கும்போது 'அருள்', 'கிருபை' என்றெல்லாம் பேர் எடுக்கிறது. வெறுமனே பரிவாக, ஒரு ஆறுதல் தருவதாக மட்டுமின்றி, கஷ்டநிலையைப் போக்கடிக்கும் சக்தி மகான்களின் அருளுக்கு இருக்கிறது.
* ஈஸ்வரன் நம்மிடம் வைக்கும் பரிவான அன்பே மேலானது. இந்த பரமகருணைக்கு 'அநுக்ரஹம்' என்று பேர் சொல்கிறோம். அப்படிப்பட்ட ஈஸ்வரனிடம் நாம் வைக்கிற உசந்த அன்பு தான் பக்தி ஆகும்.
- காஞ்சிப்பெரியவர்
* பெரியவர்களிடம் வைக்கிற அன்பு 'மரியாதை'. குழந்தையிடம் வைக்கும் அன்பு 'வாத்ஸல்யம்'. நாயகன், நாயகி இருவரும் அன்பு கொள்வது 'சிருங்காரம்'. நம் மாதிரி சாதாரணப்பட்டவர்கள் நம்மைவிட கஷ்டப்படுகிறவர்களிடம் வைக்கிற அன்புக்குப் 'பரிவு' என்று பெயர்.
* நம்மைவிட மகாபெரியவர்கள் நம்மிடம் வைக்கும்போது 'அருள்', 'கிருபை' என்றெல்லாம் பேர் எடுக்கிறது. வெறுமனே பரிவாக, ஒரு ஆறுதல் தருவதாக மட்டுமின்றி, கஷ்டநிலையைப் போக்கடிக்கும் சக்தி மகான்களின் அருளுக்கு இருக்கிறது.
* ஈஸ்வரன் நம்மிடம் வைக்கும் பரிவான அன்பே மேலானது. இந்த பரமகருணைக்கு 'அநுக்ரஹம்' என்று பேர் சொல்கிறோம். அப்படிப்பட்ட ஈஸ்வரனிடம் நாம் வைக்கிற உசந்த அன்பு தான் பக்தி ஆகும்.
- காஞ்சிப்பெரியவர்