Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/காஞ்சி பெரியவர்/உனக்குள் இருக்குது மகிழ்ச்சி

உனக்குள் இருக்குது மகிழ்ச்சி

உனக்குள் இருக்குது மகிழ்ச்சி

உனக்குள் இருக்குது மகிழ்ச்சி

ADDED : ஆக 19, 2012 03:08 PM


Google News
Latest Tamil News
* மனிதன் உடலாலும், உள்ளத்தாலும் பாவபுண்ணியங்களைச் செய்து கொண்டுஇருக்கிறான். வேதம் விதித்த தர்ம வழிகளில் நடப்பவன் புண்ணியத்தைத் தேடுகிறான். ஆசை வயப்பட்டு எந்த தப்பையும் செய்யத் துணிபவன் பாவத்தைச் சுமக்கிறான்.

* சுயநலத்தைப் பெரிதாக எண்ணாமல் சமுதாய நலனுக்காக செயல்படுபவனின் செயல் அனைத்தும் புண்ணிய கர்மமாகி விடும்.

* மனதில் எண்ணிலடங்கா ஆசைகள் முளைத்துக் கொண்டே இருக்கின்றன. ஆனால், ஆசைப்பட்டு அடைந்த பொருள் அனைத்தும் ஒரேநாளில் நம்மை விட்டுப் பிரிந்து போய்விடும் என்பதை மறந்து விடாதீர்கள்.

* ஆசை குறைந்தால் துன்பமும் குறையும். ஆசை அடியோடு நீங்கி விட்டால் மீண்டும் மண்ணில் பிறப்பெடுக்க வேண்டியதில்லை.

* வெளியுலகில் கிடைக்கும் மகிழ்ச்சி ஒருவனுக்கு என்றென்றும் நிலைப்பதில்லை. உள்மனதில் இருந்து உண்டாகும் மகிழ்ச்சியே நிரந்தரமானது. அதை அடைவதற்கு மனிதன் முயலவேண்டும்.

- காஞ்சிப்பெரியவர்




      Our Apps Available On




      Dinamalar

      Follow us