Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/செய்திகள்/குறை தீர்ப்பவர்

குறை தீர்ப்பவர்

குறை தீர்ப்பவர்

குறை தீர்ப்பவர்

ADDED : டிச 22, 2023 05:11 PM


Google News
Latest Tamil News
மண்ணாதி பூதமொடு விண்ணாதி அண்டம் நீ

மறைநான்கின் அடிமுடியும் நீ

மதியும் நீ ரவியும் நீ புனலும் நீ அனலும் நீ

மண்டலம் இரண்டேழும் நீ

பெண்ணும் நீ ஆணும் நீ பல்லுயிர்க்குயிரும் நீ

பிறவும் நீ யொருவன் நீயே

பேதாதிபேதம் நீ பாதாதி கேசம் நீ

பெற்றதாய் தந்தை நீயே

பொன்னும் நீ பொருளும் நீ இருளும் நீ ஒளியும் நீ

போதிக்க வந்த குரு நீ

புகழொணா கிரகங்கள் ஒன்பதும் நீ

இந்த புவனங்களை பெற்றவனும் நீ

எண்ணரிய ஜீவகோடிகளை ஈன்ற அப்பனே

என் குறைகளை யார்க்குரைப்பேன்?

ஈசனே சிவகாமி நேசனே!

எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே.

திருவள்ளூர் அருகே உள்ள சிறுமணவை ஊரில் முன்னுாற்றி இருபது ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர் முனுசாமி. இவரால் கடலுார் மாவட்டம் சிதம்பரத்தில் கோயில் கொண்டுள்ள நடராஜர் மீது பாடப்பட்ட பாடல் இது. இதனை நடராஜ பத்து என்பர். பத்து பாடல்களிலும் ஞானம் தரக்கூடிய தேவார திருவாசக கருத்துக்கள் உள்ளன. ஒவ்வொரு நடராஜர் சன்னதி முன்பும் பாடப்பட வேண்டிய பாடல் இது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us