Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/மனப்பாடப்பகுதி!

மனப்பாடப்பகுதி!

மனப்பாடப்பகுதி!

மனப்பாடப்பகுதி!

ADDED : மார் 31, 2015 11:41 AM


Google News
Latest Tamil News
பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக்கசைத்து

மின்னார் செஞ்சடை மேல் மிளிர்கொன்றை அணிந்தவனே

மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே

அன்னே உன்னையல்லால் இனி யாரை நினைக்கேனே.

பொருள்: தங்கநிறம் கொண்டவனே! புலித்தோல் ஆடை உடுத்தியவனே! சிவந்த சடை மீது அழகு பொங்கும் கொன்றை மாலையைச் சூடியவனே! நிலையானவனே! நவமணியாக விளங்குபவனே! திருமழபாடியில் வீற்றிருக்கும் மாணிக்கமே! தாயானவனே! உன்னைத் தவிர வேறு யாரை நான் வழிபடுவேன்?

குறிப்பு: அரியலூர் மாவட்டம் திருமழபாடி வைத்தியநாதர் குறித்து, சுந்தரர் தேவாரத்தில் பாடியது.




      Our Apps Available On




      Dinamalar

      Follow us