ADDED : ஜூன் 07, 2024 10:52 AM

கே.வானதி, சிறுமலை, திண்டுக்கல்.
*சந்திராஷ்டமத்தன்று பிரச்னையைத் தவிர்க்க...
விநாயகருக்கு அருகம்புல் மாலை சாத்துங்கள். அன்று மவுனமாக இருங்கள்.
ஆர்.திருமுருகன், பேரூர், கோயம்புத்துார்.
*அத்திமரச் சிலையை வீட்டில் வைத்து வழிபடலாமா?
வழிபடலாம். இதை 'தாரு விக்ரகம்' என்பர்.
எல்.தனபால், கடையநல்லுார், தென்காசி.
*பிரம்மஹத்தி தோஷம் என்றால்...
சாதுக்கள்,அந்தணர்களுக்கு துன்பம் செய்வது பிரம்மஹத்தி தோஷம்.
வி.ரவிச்சந்திரன், திருவாடானை, ராமநாதபுரம்.
*திருமணத்தில் நலுங்கு வைப்பது ஏன்?
தம்பதியர் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளவும், விட்டுக் கொடுத்து வாழவும் நலுங்கு வைக்கப்படுகிறது.
எஸ்.பார்கவி, குளச்சல், கன்னியாகுமரி.
*மனிதனாகப் பிறப்பது அரிது என்றால் சிலர் பிறவாத வரம் கேட்கிறார்களே...
மனிதப்பிறவியின் அருமை தெரியாதவர்களுக்காக 'அரிது அரிது மானிடர் ஆதல் அரிது' என்றார் அவ்வையார். பக்தியைத் தவிர வேறு எதற்கும் ஆசைப்படாத அருளாளர்கள் பிறவாத வரத்தை விரும்புகின்றனர்.
சி.அம்பிகா, வில்லியனுார், புதுச்சேரி.
*நதி, மலைகளை புனிதமாக கருதுவது ஏன்?
இயற்கையின் அற்புதங்கள் நதி,மலைகள். ஆன்மிக சக்தி உள்ள இவற்றில் நீராடுவது, வலம் வருவது நம் நன்மைக்காகவே.
எம்.ராஜலட்சுமி, திரிவேணிபுரி, டில்லி.
*சுவாமி சிலைகளை பஞ்ச லோகத்தில் செய்வது ஏன்?
தெய்வ சக்தியை அதிகமாக ஈர்க்கும் தன்மை பஞ்ச லோகத்திற்கு உண்டு. இதை ஐம்பொன் என்றும் சொல்வர்.
ஆர்.புனிதா, திண்டிவனம், விழுப்புரம்.
*முகூர்த்தம் என்பதன் கால அளவு எவ்வளவு?
முகூர்த்தம் என்பது மூன்றே முக்கால் நாழிகை. ஒரு நாழிகைக்கு 24 நிமிடம். அதன்படி ஒன்றரை மணி நேரம்(90 நிமிடம்)
எஸ்.கண்ணன், எழும்பூர், சென்னை.
*உப்பு, மிளகை காணிக்கை செலுத்துவது ஏன்?
கொப்பளம், தோல்நோய் தீர அம்மனுக்கு இதை காணிக்கை செலுத்துகிறோம்.
டி.கணேஷ், குஷால்நகர், மைசூரு.
*உயிரைப் பறிக்கும் எமனை 'எமதர்மன்' என்பது ஏன்?
சிவபெருமானுடைய கட்டளைப்படி அழித்தல் தொழிலைச் செய்பவர் எமன். இவர் தர்மநெறி தவறாதவர். இதனால் இவர் 'எமதர்மன்' எனப்படுகிறார்.
*சந்திராஷ்டமத்தன்று பிரச்னையைத் தவிர்க்க...
விநாயகருக்கு அருகம்புல் மாலை சாத்துங்கள். அன்று மவுனமாக இருங்கள்.
ஆர்.திருமுருகன், பேரூர், கோயம்புத்துார்.
*அத்திமரச் சிலையை வீட்டில் வைத்து வழிபடலாமா?
வழிபடலாம். இதை 'தாரு விக்ரகம்' என்பர்.
எல்.தனபால், கடையநல்லுார், தென்காசி.
*பிரம்மஹத்தி தோஷம் என்றால்...
சாதுக்கள்,அந்தணர்களுக்கு துன்பம் செய்வது பிரம்மஹத்தி தோஷம்.
வி.ரவிச்சந்திரன், திருவாடானை, ராமநாதபுரம்.
*திருமணத்தில் நலுங்கு வைப்பது ஏன்?
தம்பதியர் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளவும், விட்டுக் கொடுத்து வாழவும் நலுங்கு வைக்கப்படுகிறது.
எஸ்.பார்கவி, குளச்சல், கன்னியாகுமரி.
*மனிதனாகப் பிறப்பது அரிது என்றால் சிலர் பிறவாத வரம் கேட்கிறார்களே...
மனிதப்பிறவியின் அருமை தெரியாதவர்களுக்காக 'அரிது அரிது மானிடர் ஆதல் அரிது' என்றார் அவ்வையார். பக்தியைத் தவிர வேறு எதற்கும் ஆசைப்படாத அருளாளர்கள் பிறவாத வரத்தை விரும்புகின்றனர்.
சி.அம்பிகா, வில்லியனுார், புதுச்சேரி.
*நதி, மலைகளை புனிதமாக கருதுவது ஏன்?
இயற்கையின் அற்புதங்கள் நதி,மலைகள். ஆன்மிக சக்தி உள்ள இவற்றில் நீராடுவது, வலம் வருவது நம் நன்மைக்காகவே.
எம்.ராஜலட்சுமி, திரிவேணிபுரி, டில்லி.
*சுவாமி சிலைகளை பஞ்ச லோகத்தில் செய்வது ஏன்?
தெய்வ சக்தியை அதிகமாக ஈர்க்கும் தன்மை பஞ்ச லோகத்திற்கு உண்டு. இதை ஐம்பொன் என்றும் சொல்வர்.
ஆர்.புனிதா, திண்டிவனம், விழுப்புரம்.
*முகூர்த்தம் என்பதன் கால அளவு எவ்வளவு?
முகூர்த்தம் என்பது மூன்றே முக்கால் நாழிகை. ஒரு நாழிகைக்கு 24 நிமிடம். அதன்படி ஒன்றரை மணி நேரம்(90 நிமிடம்)
எஸ்.கண்ணன், எழும்பூர், சென்னை.
*உப்பு, மிளகை காணிக்கை செலுத்துவது ஏன்?
கொப்பளம், தோல்நோய் தீர அம்மனுக்கு இதை காணிக்கை செலுத்துகிறோம்.
டி.கணேஷ், குஷால்நகர், மைசூரு.
*உயிரைப் பறிக்கும் எமனை 'எமதர்மன்' என்பது ஏன்?
சிவபெருமானுடைய கட்டளைப்படி அழித்தல் தொழிலைச் செய்பவர் எமன். இவர் தர்மநெறி தவறாதவர். இதனால் இவர் 'எமதர்மன்' எனப்படுகிறார்.