Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/கிறிஸ்துவம்/கட்டுரைகள்/ஏழைக்கு இரங்குங்கள்

ஏழைக்கு இரங்குங்கள்

ஏழைக்கு இரங்குங்கள்

ஏழைக்கு இரங்குங்கள்

ADDED : ஆக 10, 2018 08:25 AM


Google News
Latest Tamil News
கணவர்களே... உங்கள் மனைவியைக் காதலியுங்கள். மாறாக அவர்களுக்கு கசப்பாயிராதீர்கள்.

* ஏழை மீது இரக்கம் வைப்பவன் கடவுளுக்குக் கடன் கொடுக்கிறான்.

* உன்னிடத்தில் வந்து கேட்பவனுக்குக் கொடு. உன்னிடம் கடன் கேட்க விரும்புகிறவனுக்கு முகத்தைத் திருப்பாதே.

* துன்மார்க்கன் கடன் வாங்குகிறான். அதை திருப்பிக் கொடுப்பதில்லை. ஆனால் நீதிமானோ கருணை காட்டிக் கொடுக்கிறான்.

* உன்னுடைய கண் உன் உடலில் தீபமாயிருக்கிறது. உன் கண் ஒருமைப்பாடுடன் இயல்பானதாக இருந்தால் உன் உடல் முழுவதும் பிரகாசமுள்ளதாயிருக்கும்.

* கருணையும் சத்தியமும் ஒன்றையொன்று சந்திக்கும். நேர்மையும் அமைதியும் ஒன்றையொன்று முத்தமிடும்.

* நண்பன் எந்தக் காலத்திலும் நேசிப்பான். ஆபத்து சமயத்தில் உதவவே சகோதரன் பிறந்தான்.

* வாயடக்கமாயிரு. உதடுகளை அதிகம் திறக்காதே. உதடுகளுக்குத் துாரமாயிரு.

* தன்னைத் தானே உயர்த்திக் கொள்கிறவன் தாழ்த்தப்படுகிறான். தன்னைத் தானே தாழ்த்திக் கொள்பவனோ உயர்த்தப்படுகிறான்.

* நீ உத்தமனாக இருக்க விரும்பினால் உனக்குள்ளவைகளை விற்றுத் தரித்திரர்களுக்குக் கொடு.

-பைபிள் பொன்மொழிகள்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us