Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/கிறிஸ்துவம்/கட்டுரைகள்/நேர்மை வழியில் நடப்போம்

நேர்மை வழியில் நடப்போம்

நேர்மை வழியில் நடப்போம்

நேர்மை வழியில் நடப்போம்

ADDED : அக் 05, 2018 03:19 PM


Google News
Latest Tamil News
* நேர்மையானவர்களுக்கு இருட்டிலும் வெளிச்சம் பிறக்கும்.

* நல்ல குணம் கொண்டவர்கள் சுற்றத்தினருக்கு மட்டுமின்றி இந்த பூமிக்கும் பாக்கியத்தை தருகின்றனர்.

* இன்பத்தை விட துன்பம் சிறந்தது. ஏனெனில் வெளியே இருக்கும் துன்பம் உள்ளே இருக்கும் இதயத்தை வலிமையாக்குகிறது.

* எந்த பிரச்னையிலாவது தலையிட்டுக் கொண்டே இருப்பான் முட்டாள். புத்திசாலி விலகியே இருப்பான்.

* முதல்வனாய் இருக்க விரும்புபவன், எல்லோருக்கும் தொண்டனாக இருக்க வேண்டும்.

* நீதிமான் தன் மரணத்திலும், நம்பிக்கையை விட மாட்டான்.

* மவுனமாயிருந்தால், முட்டாள்கள் கூட அறிவாளியாய் மதிக்கப்படுவார்கள்.

* புற்றை உடைப்பவர் பாம்பால் கடிபடுவது போல, பிறருக்காக படுகுழி தோண்டுபவரே அந்தக் குழிக்குள் விழுவார்.

* நல்ல மரத்தில் கெட்ட கனிகளையும், கெட்ட மரத்தில் நல்ல கனிகளையும் எதிர்பார்ப்பது மூடத்தனமானது.

* வாக்குவாதம் வேண்டாம். அதனால் கேட்பவர்களின் புத்தி தடுமாறுமே ஒழிய பலன் இல்லை.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us