Dinamalar-Logo
Dinamalar Logo


/உலக தமிழர்/சிங்கப்பூர்/செய்திகள்/சிங்கப்பூர் ஆலயத்தில் ஸ்ரீ கந்த சஷ்டி 4 - 5 ஆம் நாள் விழா கோலாகலம்

சிங்கப்பூர் ஆலயத்தில் ஸ்ரீ கந்த சஷ்டி 4 - 5 ஆம் நாள் விழா கோலாகலம்

சிங்கப்பூர் ஆலயத்தில் ஸ்ரீ கந்த சஷ்டி 4 - 5 ஆம் நாள் விழா கோலாகலம்

சிங்கப்பூர் ஆலயத்தில் ஸ்ரீ கந்த சஷ்டி 4 - 5 ஆம் நாள் விழா கோலாகலம்

நவ 07, 2024


Google News
Latest Tamil News
சிங்கப்பூர் மார்ஷலிங் ஸ்ரீ சிவ கிருஷ்ணர் ஆலயத்தில் ஸ்ரீ கந்த சஷ்டி நவம்பர் இரண்டாம் தேதியிலிருந்து வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. ஸ்ரீ முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் - கந்தர் அனுபூதி திருப்புகழ் பாராயணம் - சத்ரு சம்ஹார த்ருசதி அர்ச்சனை என ஆலயம் நிரம்பி வழிந்த பக்தப் பெருமக்களிடையே மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது. நாளை அம்பிகையிடமிருந்து வேல் வாங்கும் அற்புத நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

பக்தர்கள் தங்கள் பங்கினைச் சமர்ப்பிக்கப் பதிவு செய்து வருகின்றனர். முத்திரைத் திருவிழாவை எதிர் நோக்கியுள்ள பக்தர்களுக்குப் பெரு விருந்து படைக்க ஆலயம் தயார் நிலையிலுள்ளதாக ஆலய நிர்வாகக் குழு உறுப்பினர் சத்தீஷ் விழாக்குழு சார்பாகத் தெரிவிக்கிறார்.

- நமது செய்தியாளர் வெ.புருஷோத்தமன்







      Our Apps Available On




      Dinamalar

      Follow us