ஜன 19, 2025

தோஹா: கத்தார் நாட்டின் தோஹா நகரில் உலக இந்தி மொழி தினம் இந்திய தூதரகத்தின் சார்பில் அனுசரிக்கப்பட்டது. இந்திய தூதர் விபுல் விழாவுக்கு தலைமை வகித்தார். அவர் இந்தி மொழியின் முக்கியத்துவம் குறித்து விவரித்தார்.
இந்தி மொழியில் கதை, கவிதை உள்ளிட்ட பல்வேறு படைப்புகளை மாணவ, மாணவியர் வழங்கினர். விழாவில் பொதுமக்கள் பலர் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
- நமது செய்தியாளர் காஹிலா