Dinamalar-Logo
Dinamalar Logo


/உலக தமிழர்/வளைகுடா/செய்திகள்/ஷார்ஜாவில் ஓட்டப்போட்டியில் முதலிடம் பிடித்த தமிழக வீரர்

ஷார்ஜாவில் ஓட்டப்போட்டியில் முதலிடம் பிடித்த தமிழக வீரர்

ஷார்ஜாவில் ஓட்டப்போட்டியில் முதலிடம் பிடித்த தமிழக வீரர்

ஷார்ஜாவில் ஓட்டப்போட்டியில் முதலிடம் பிடித்த தமிழக வீரர்

ஆக 06, 2024


Google News
Latest Tamil News
ஷார்ஜா : ஷார்ஜாவில் நடந்த ஓட்டப்போட்டியில் நான்கு கிலோ மீட்டர் பிரிவில் முதலிடம் பிடித்தார் தமிழக வீரர் நாகர்கோவில் செய்யது அலி.

ஷார்ஜாவில் உள்ள மிகப்பெரிய வணிக வளாகம் சஹாரா சென்டர். இந்த வணிக வளாகத்தில் கோடை காலத்தையொட்டி ஷார்ஜா விளையாட்டு கவுன்சிலின் சார்பில் உள்ளரங்கு ஓட்டப்போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.



இந்த போட்டி 1 கிலோ மீட்டர் 8 கிலோ மீட்டர் வரை பல்வேறு பிரிவுகளில் போட்டி நடந்தது. இதில் 400 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.



இதில் நான்கு கிலோ மீட்டர் பிரிவில் தமிழகத்தின் நாகர் கோவிலைச் சேர்ந்த செய்யது அலி முதல் இடம் பெற்று தமிழகத்துக்கு பெருமை சேர்த்தார். அவருக்கு ஷார்ஜா விளையாட்டு கவுன்சில் அதிகாரிகள் பதக்கம் வழங்கி கௌரவித்தனர்.



பதக்கம் பெற்ற தமிழக வீரர் செய்யது அலிக்கு பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர். 50 வயதை கடந்தாலும் தொடர்ந்து ஓட்டப்போட்டிகளில் சாதனை படைத்து வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் சர்வதேச அளவிலான மாரத்தான் போட்டிகளிலும் பங்கேற்று சிறப்பிடம் பெற்றுள்ளது சிறப்பானது.



- நமது செய்தியாளர் காஹிலா







      Our Apps Available On




      Dinamalar

      Follow us