/உலக தமிழர்/வளைகுடா/செய்திகள்/ஈராக்கில் இந்தியாவின் 78வது சுதந்திர தினம் உற்சாக கொண்டாட்டம்ஈராக்கில் இந்தியாவின் 78வது சுதந்திர தினம் உற்சாக கொண்டாட்டம்
ஈராக்கில் இந்தியாவின் 78வது சுதந்திர தினம் உற்சாக கொண்டாட்டம்
ஈராக்கில் இந்தியாவின் 78வது சுதந்திர தினம் உற்சாக கொண்டாட்டம்
ஈராக்கில் இந்தியாவின் 78வது சுதந்திர தினம் உற்சாக கொண்டாட்டம்
ஆக 23, 2024

பாக்தாத் : ஈராக் நாட்டின் தலைநகர் பாக்தாத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் 78வது சுதந்திர தின விழா மிகவும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இந்திய தூதரக அதிகாரி டி. ஹேங்சிங் இந்திய தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.அதனையடுத்து இந்திய குடியரசுத்தலைவரின் சுதந்திர தின உரையை வாசித்தார்.
கண்கவர் கலை நிகழ்ச்சி நடந்தது. யோகா பயிற்சியினை நிறைவு செய்தவர்களுக்கு சான்றிதழ்களை இந்திய தூதரக அதிகாரி வழங்கி கௌரவித்தார். இந்திய சுதந்திர தின விழாவையொட்டி இந்திய தூதரகம் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. விழாவில் இந்திய தூதரக அதிகாரிகள் உள்ளிட்ட இந்திய சமூகத்தினர் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
- நமது செய்தியாளர் காஹிலா