/உலக தமிழர்/வளைகுடா/செய்திகள்/துபாய் நூலகத்துக்கு கொடிக்கால்பாளையம் இ. எம். ஜிப்ரில் எழுதிய 17 நூல்கள் அன்பளிப்புதுபாய் நூலகத்துக்கு கொடிக்கால்பாளையம் இ. எம். ஜிப்ரில் எழுதிய 17 நூல்கள் அன்பளிப்பு
துபாய் நூலகத்துக்கு கொடிக்கால்பாளையம் இ. எம். ஜிப்ரில் எழுதிய 17 நூல்கள் அன்பளிப்பு
துபாய் நூலகத்துக்கு கொடிக்கால்பாளையம் இ. எம். ஜிப்ரில் எழுதிய 17 நூல்கள் அன்பளிப்பு
துபாய் நூலகத்துக்கு கொடிக்கால்பாளையம் இ. எம். ஜிப்ரில் எழுதிய 17 நூல்கள் அன்பளிப்பு

கத்தார் நாட்டின் இஸ்லாமிய விவகாரத்துறை அலுவலகத்தில் பணிபுரிந்து வருபவர் கொடிக்கால்பாளையம் இ. எம். ஜிப்ரில் . இவர் எழுதிய தடம் பதித்த தமிழர்கள் - முதல் பாகம், தடம் பதித்த தமிழர்கள் - இரண்டாம் பாகம், இன்னல் தீர்க்கும் இயற்கை வைத்தியம், கொடிநகரானின் சிந்தனை கற்கண்டுகள், கன்னல் கவிச்சோலை, கொடிநகரானின் வெள்ளிச் சிந்தனை, கொடிநகரானின் கவிதைகள், கொடிநகரானின் கவிச்சாரல்கள், கொடிநகரானின் கவித்தூறல்கள், கொடிநகரானின் கவிச்சிதறல்கள், கொடிநகரானின் கவித்தேடல்கள், கொடிநகரானின் கவிமுகில்கள், கொடிநகரானின் கவிமலர்கள், கொடிநகரானின் கவிவண்ணங்கள், கொடிநகரானின் கவிமாலைகள், கொடிநகரானின் கவிச்சரங்கள் மற்றும் பாமரனின் ஏடு ஆகிய 17 நூல்களும் துபாய் நகரின் பிரமாண்ட நூலகமாக செயல்பட்டு வரும் முஹம்மது பின் ராஷித் நூலகத்துக்கு ஒரே நேரத்தில் அன்பளிப்பாக வழங்கி சாதனை படைக்கப்பட்டது. இந்த நூல்களை நூலக அலுவலர் அமீரா பஹத் இடம் ஊடகவியலாளர் முதுவை ஹிதாயத் நூலாசிரியர் சார்பில் வழங்கினார்.
கத்தார் அரசின் இஸ்லாமிய விவகாரத்துறை அமைச்சகத்தில் கடந்த 1992 ஆம் ஆண்டு முதல் இன்று வரை 32 ஆண்டுகளாக பணி செய்து வருகிறார். ஐந்திணை பாவலர் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார்.
- நமது செய்தியாளர் காஹிலா