
புது ஆட்டம்
24 வயதில் திருமணம். வாழ்வாதாரத்திற்காக கோவை சென்றோம். ஊர்பிடிக்காமல் சொந்த ஊர் திரும்பினேன். வேலையே கதி என்றிருந்த அந்நாட்களுக்கு பின் மீண்டும் இசைக்க துவங்கிய போது பறை வாசிக்க வரவில்லை. பின் முருகன் வாத்தியாரிடம் புதிய அடி புதிய ஆட்டம் கற்றுக் கொண்டேன். எனக்கு பழைய அடி தான் தெரியும். ஆனால் புது அடி புது ஆட்டம் பழகிய பின் தான் பழைய அடிக்கு தான் வீரியம் இருந்தது புரிந்தது.
பறை இசையின் அதிர்வு
வைத்தியப்பறை என்னவென்றால், அந்த காலத்தில் இறந்த 2 மணி நேரம் வரை உயிர் இருக்க வாய்ப்பிருப்பதால் பறையின் துடிப்பான இசையின் அதிர்வால் உயிர் வர வாய்ப்புள்ளது. அடித்தும் வரவில்லை என்றால் இறந்ததாக கருதப்படும். செய்தி சொல்லும் பறை என்றால் இறந்தவர் வீட்டில், அவரது வாழ்க்கையை கூறும் பறை. காப்பாற்றும் பறை என்றால் இறப்பு வீட்டில் பிறர் சோகத்தால் துவண்டு விடக்கூடாது. அடித்து ஆடி அவர்கள் கவனத்தை திசை திருப்புவதால் இது காப்பாற்றும் பறை.