Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/குமுறும் குடியிருப்போர்.

குமுறும் குடியிருப்போர்.

குமுறும் குடியிருப்போர்.

குமுறும் குடியிருப்போர்.

ADDED : ஆக 23, 2010 02:19 AM


Google News

புதூர்:மதுரை மாநகராட்சியும், புறநகர் பகுதியும் இணையும் பகுதியில் உள்ளது புதூர் நான்காவது வார்டு.

நகரின் அருகில் அழகர்நகர் விரிவாக்கம், சம்பக்குளம், புறநகரில் கொடிக் குளம், பாரத் நகர், கடச்சனேந்தலின் ஒரு பகுதி உள்ளன. மாநகராட்சியில் இருந் தாலும், இன்னமும் இந்தப் பகுதிகள் ரோடு, குடிநீர் என, அடிப்படை வசதிகள் இல்லாமல் கிராமச் சூழலில் தான் உள்ளன. சுவடே தெரியாத தார் ரோடு, தூர் வாராத கழிவுநீர் வாய்க்கால், எங்கும் கொட்டிக் கிடக்கும் குப்பைகள் என, சுகாதார கேடு நிறைந்து உள்ளன. வாய்க்கால்கள் தூர்ந்து போனதால், மழை பெய்யும்போது கழிவுநீர் வீடுகளில் புகுந்து விடுகிறது. தங்களின் இந்த அவஸ்தைக்கு விடிவுதான் கிடைக்காதா? என, அப்பகுதியில் உள்ள குடியிருப்போர், குமுறல்களை வெளியிட்டனர்.அழகர்நகர் அப்துல்ஹக்கீம் (வியாபாரி): வீட்டுவரி, குழாய் வரி, ரோடு வரி என அனைத்து வரிகளும் கட்டுகிறோம். எந்த அடிப்படை வசதியும் இல்லை. ரோடு அமைப்பதற்காக ஆறு மாதத்திற்கு முன் ஒதுக்கிய நிதியை வேறு வேலைக்கு பயன்படுத்திவிட்டனர். ரோடு குண்டும், குழியுமாக உள்ளதால் நாங்களே கப்பி அடித்து ரோடு அமைத்துள்ளோம், என்றார்.பாரத்நகர் ஜெயராஜ் (ரியல் எஸ்டேட் புரோக்கர்): இங்கு 500 வீடுகளில் ஏராளமானோர் வசிக்கிறோம். 25 ஆண்டுகளாகியும் குடிநீர் வசதி செய்யவில்லை. வாரத்திற்கு ஒருநாள் லாரியில் வரும் தண்ணீர், வீட்டிற்கு இரண்டு குடம் மட்டுமே கிடைக்கிறது. கழிவுநீர் செல்ல வழியில்லாமல் தேங்கி நிற்பதால் கொசுக்கள் அதிகம் உற்பத்தியாகின்றன. பன்றிகள் தொல்லை அதிகம் உள்ளது, என்றார்.மருதங்குளம் புஷ்பம்: பாதாள சாக்கடை பணிகள் முடிந்து பல மாதங்கள் ஆகிறது. தோண்டிய ரோட்டை முறையாக மூடவில்லை. இரவில் தெரு விளக்குகள் எரிவதில்லை. வாகனங்களில் வருபவர்கள் முட்புதர்களில் விழுந்து காயங்களுடன் வருகின்றனர். குடிநீர் குழாய் இணைப்பு இல்லை. தண்ணீருக்காக மாதாமாதம் தனி பட்ஜெட் ஒதுக்க வேண்டி உள்ளது, என்றார்.



சம்பக்குளம் கருப்பையா (பலசரக்கு கடை உரிமையாளர்): பாதாள சாக்கடை பணிகள் முடிந்த பிறகு அமைத்த ரோடுகள் தரமானதாக இல்லை. மழையில் ரோடுகள் சேதமாகி குண்டும், குழியுமாக உள்ளது. வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தெருக்களில் தேங்கி நிற்கிறது. மழை நேரத்தில் கழிவுநீர் வீடுகளை சூழ்ந்து கொள்கிறது. சிலர் பாத்திரங்களில் எடுத்து வேறு இடத்தில் ஊற்றுகின்றனர். குப்பைகளை அகற்றுவதற்கு மாநகராட்சி ஊழியர்கள் வருவதில்லை. ரோடு ஓரங்களில் கொட்டப்படும் குப்பையால் சுகாதாரக் கேடு ஏற்படுகிறது, என்றார்.தொழிற்பேட்டையை உருவாக்கியகப்பலூர் தொழிலதிபர் சங்கம்மதுரையில் இருந்து 18 கி.மீ., தொலைவில் உள்ள, தமிழகத்தின் இரண்டாவது பெரிய சிட்கோ தொழிற்பேட்டையில் கப்பலூர் தொழில் அதிபர் சங்கம் இயங்குகிறது. ஒன்பது உறுப்பினர்களைக் கொண்டு 1992ல் இச்சங்கத்தை துவங்கியவர் டி.சக்ரவர்த்தி. இச்சங்கத்தின் கீழ், 300 தொழிற்சாலைகள், 16 ஆயிரம் தொழிலாளர்கள் உள்ளனர். ஐந்தாண்டுகளுக்கு முன், கப்பலூர் தொழிற்பேட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. சங்க முயற்சியால், தொழிற்பேட்டைக்கு தேவையான போஸ்ட் ஆபீஸ் அமைக்கப்பட்டது. சங்க கட்டடத்தின் ஒரு பகுதியில் இயங்கும் டெக்ஸ்டைல் சென்டர், அத்துறையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு வரப்பிரசாதமாக உள்ளது. ஏழு ஆண்டுகளாக சங்கத்தின் பெரும் முயற்சியால், மத்திய அரசின் 80 சதவீதம் மானியம் பெற்று, 2.10 கோடி ரூபாய்க்கு ரோடுகள் அமைக்கப்பட்டதோடு, மழைநீர் வடிகாலும் புதுப்பிக்கப்பட்டது. தற்போது 45 லட்சம் ரூபாயில் தொழிற்பேட்டை இணைப்புச்சாலைகள் புதுப்பிக்கப்படுகின்றன.கப்பலூர் தொழிற்பேட்டையின் உள்அமைப்பாக, மகளிர் தொழிற்பேட்டை அமைந்துள்ளது. 2006ல் இதற்கான முயற்சி எடுக்கப்பட்டது. சுமார் 30 ஏக்கரை 25 சென்டுகளாக பிரித்து, தலைமுறை பெண் தொழிலதிபர்களுக்கு இடஒதுக்கீடு செய்யப்பட்டது. தற்போது 20 பெண்கள் தொழில் தொடங்கியுள்ளனர். பல்வேறு அமைப்புகளிலும், அரசின் ஆலோசனைக் குழுக்களிலும் உறுப்பினராக இருந்து, தொழிற்பேட்டை வளர்ச்சிக்கு காரணமாக இருக்கும் இச்சங்கத்தின் தற்போதைய தலைவராக ஜெ.செல்வம் இருக்கிறார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us