/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பு அமல்படுத்த திட்டம்அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பு அமல்படுத்த திட்டம்
அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பு அமல்படுத்த திட்டம்
அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பு அமல்படுத்த திட்டம்
அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பு அமல்படுத்த திட்டம்
புதுச்சேரி : ஸ்மார்ட் வகுப்பு விஷூவல் கல் வித் திட்டத்தை அமல்படுத்த வேண் டுமென, புதுச்சேரி நகராட்சி கவுன் சிலர்கள் கூட்டமைப்பு தலைவர் அனிபால் நேரு கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:தமிழகத்தை போல புதுச்சேரியிலும் ஸ்மார்ட் வகுப்பு என்ற டிஜிட் டல் வகுப்பறை திட்டத்தை அரசுப் பள்ளிகளில் கொண்டு வர வேண் டும்.
அதே சமயத்தில் அரசு பள்ளிகளின் தரம் உயர்வதோடு, ஏழை பெற்றோர் கடன் வாங்கி தனியார் பள்ளிகளைத் தேடி பிள்ளைகளைச் சேர்க்கும் அவல நிலை மாறும். உயர்கல்வி, தொழில் கல்லூரிகள் என்று வரும் போது தனியார் கல்லூரிகளை விட அரசு கல்வி நிறுவனங்கள் தரம் உயர்ந்து காணப்படும். அரசு கல்லூரிகள், பள்ளிகள் தனியார் பள்ளிகளிடம் கோட்டை விடுவதை இது போன்ற திட்டங்கள் மூலம் சரி செய் யலாம்.ஸ்மார்ட் வகுப்பு திட்டமோ அல்லது வேறு எந்த புதிய திட்டத் தையோ அறிமுகம் செய்யும் போது தமிழ் மொழியை பயிற்றுவிக்கும் அதே சமயத்தில் உலக பொது மொழியாக விளங்கும் ஆங்கிலத் தையும் பேசும் அளவிற்கு மாணவர் களை தயார் செய்வதில் அரசு அக் கறை காட்ட வேண்டும்.அப்போதுதான் எதிர்கால சந்ததியினர் தன்னம்பிக்கையுடன் உலக அளவில் சாதனை படைக்க முடியும். அதற்கு முதலில், பள்ளி ஆசிரியர்களுக்கு சிறப்பாக ஆங்கிலத்தில் பயிற் சியளிக்க வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


