ADDED : ஆக 24, 2010 03:03 AM
மதுரை: மதுரை மாவட்ட கால்பந்து கழகத்தின் சார்பில் மதுரை செயின்ட் மேரீஸ் பள்ளியில், 'சி' பிரிவு கால்பந்து போட்டிகள் நடக்கின்றன.
போட்டி முடிவுகள் : உசிலம்பட்டி அணி 4 - 0 என்ற கோல் கணக்கில் எஸ்.டி.ஏ.டி., 'பி' அணியை வீழ்த்தியது. பாரி 3, முகுந்தன் ஒரு கோல் அடித்தனர். செந்தில்குமார் அணி, 2 - 1 என்ற கோல் கணக்கில் லூர்து அன்னை அணியை வீழ்த்தியது. அஜித் 2, திருமலை (லூர்து அன்னை) கோல் அடித்தனர். லில்லி அணி 1 - 1 என்ற கோல் கணக்கில் ரெடீம் அணியை சமன் செய்தது. வேல்முருகன், கான்சிங் தலா ஒரு கோல் அடித்தனர். அக்மி அணி 2 - 1 என்ற கோல் கணக்கில் கிட்டு 11 அணியை வீழ்த்தியது. வசந்த சரவணன், பிரேம் குமார் (கிட்டு அணி) கோல் அடித்தனர்.