ADDED : ஜூலை 25, 2011 12:30 AM
செஞ்சி : செஞ்சி அருகே உள்ள நங்கிலிகொண்டான் கிராமத்தை சேர்ந்த திருமுருகன் மனைவி சங்கீதா,30.
இவர் கடந்த 19ம் தேதி இரவு தனது வீட்டில் சமையல் செய்தார். அப்போது சேலையில் தீப்பிடித்து படுகாயமடைந்தார். சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இவர், சிகிச்சை பலனின்றி கடந்த 22ம் தேதி இரவு இறந்தார்.