/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ஆதி திராவிட நலத்துறை தாசில்தார் ஜீப் ஜப்திஆதி திராவிட நலத்துறை தாசில்தார் ஜீப் ஜப்தி
ஆதி திராவிட நலத்துறை தாசில்தார் ஜீப் ஜப்தி
ஆதி திராவிட நலத்துறை தாசில்தார் ஜீப் ஜப்தி
ஆதி திராவிட நலத்துறை தாசில்தார் ஜீப் ஜப்தி
ADDED : செப் 14, 2011 03:01 AM
ஆதி திராவிடர் நலத் துறைக்கு நிலம் வழங்கியவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்கப்படாததால், ஆதி திராவிடர் நலத்துறை தாசில்தார் ஜீப்பை, கோர்ட் ஜப்தி செய்தது.மதுராந்தகம் அடுத்த தென்னேரிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தோர், லட்சுமிபதி, புரு÷ஷாத்தமன், வெங்கடேசன், சீனுவாசன், பிரேமா, கோதண்டராமன் மற்றும் இந்துமதி. இவர்களுக்குச் சொந்தமாக, பனையடிவாக்கம் கிராமத்திலிருந்த, 4 ஏக்கர் 71 சென்ட் நிலத்தை, 1999ம் ஆண்டு, ஆதி திராவிடர் நலத்துறை கையகப்படுத்தியது.
அந்த நிலத்திற்கு, ஒரு சென்ட் 150 ரூபாய் வீதம் நஷ்ட ஈட்டுத் தொகை நிர்ணயிக்கப்பட்டது.அவர்கள், கூடுதல் தொகை வழங்கக் கோரி, 2001ம் ஆண்டு மதுராந்தகம் சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த அப்போதைய நீதிபதி நந்தன், ஒரு சென்ட்டுக்கு 720 ரூபாய் வழங்கும்படி, 2006ம் ஆண்டு உத்தரவிட்டார். அதன்படி, 5 லட்சத்து 45 ஆயிரத்து 47 ரூபாய் வழங்க வேண்டும். அதை ஆதி திராவிடர் நலத்துறை வழங்கவில்லை.எனவே, தாசில்தார் ஜீப்பை ஜப்தி செய்யக்கோரி, சம்பந்தப்பட்டவர்கள் அதே நீதிமன்றத்தில் நிறைவேற்று மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த நீதிபதி தருமன், ஆதி திராவிடர் நலத்துறை தாசில்தார் ஜீப்பை ஜப்தி செய்யும்படி, கடந்த மாதம் 23ம் தேதி உத்தரவிட்டார்.நேற்று பகல் 12 மணிக்கு, மதுராந்தகம் ஆர்.டி.ஓ., அலுவலக வளாகத்தில் உள்ள, ஆதி திராவிடர் நலத்துறை அலுவலகத்திற்கு, கோர்ட் ஊழியர்கள் சென்றனர். அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஜீப்பை ஜப்தி செய்தனர்.
-க.வீரராகவன்-