Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/இந்தியா/அரசியல் சாசனத்திற்கு சவால்விடும் எதிர்க்கட்சிகள்: துணை ஜனாதிபதி

அரசியல் சாசனத்திற்கு சவால்விடும் எதிர்க்கட்சிகள்: துணை ஜனாதிபதி

அரசியல் சாசனத்திற்கு சவால்விடும் எதிர்க்கட்சிகள்: துணை ஜனாதிபதி

அரசியல் சாசனத்திற்கு சவால்விடும் எதிர்க்கட்சிகள்: துணை ஜனாதிபதி

UPDATED : ஜூலை 03, 2024 03:35 PMADDED : ஜூலை 03, 2024 03:34 PM


Google News
Latest Tamil News

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

புதுடில்லி: ‛‛ பிரதமர் மோடியின் உரையை புறக்கணித்து, ராஜ்யசபாவில் இருந்து எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தது அரசியல் சாசனத்திற்கு சவால் விடும் வகையில் நடந்து கொண்டனர் '' என, அவைத் தலைவரும், துணை ஜனாதிபதியுமான ஜக்தீப் தன்கர் கூறினார்.

ராஜ்யசபாவில் எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பேச அனுமதி வழங்கவில்லை எனக்கூறி எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு செய்தனர்.

Image 1288825இது தொடர்பாக ஜக்தீப் தன்கர் கூறியதாவது: அரசியல்சாசனத்திற்கு சவால்விடும் வகையிலும், அவர்கள் ஏற்றுக் கொண்ட உறுதிமொழிக்கு எதிராக எதிர்க்கட்சியினரின் செயல் உள்ளது. வெளிநடப்பு செய்ததன் மூலம், எதிர்க்கட்சி தலைவராக ஏற்றுக் கொண்ட உறுதிமொழியை கார்கே மீறி உள்ளார். அவர்கள் அரசியல்சாசனத்தை அவமரியாதை செய்துள்ளனர். தங்களின் செயலை அவர்கள் மறு ஆய்வு செய்ய வேண்டும்.

Image 1288826எந்த இடையூறும் இன்றி பேசுவதற்கு வாய்ப்பு வழங்கப்படும் என அவர்களுக்கு நான் உறுதி அளித்தேன். இன்று அவர்கள் அவையை விட்டு வெளியேறவில்லை. மரியாதையை விட்டுச் சென்றார். அவர்களின் முதுகை எனக்கு காட்டவில்லை. அரசியல்சாசனத்திற்கு காட்டினர்.

என்னையையோ, உங்களையோ அவர்கள் அவமதிக்கவில்லை. அரசியல்சாசனத்தின் மீது ஏற்றுக் கொண்ட உறுதிமொழியை மீறி உள்ளனர். அரசியலமைப்பை அவமதிக்கும் செயல், இதைவிட வேறு எதுவும் இருக்க முடியாது. அவர்களின் செயலுக்கு நான் கண்டனம் தெரிவிக்கிறேன். இந்திய அரசியலமைப்பு சட்டம் என்பது, கையில் வைத்து இருப்பது அல்ல. இவ்வாறு ஜக்தீப் தன்கர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us