/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/தென்காசியில் 8ம் தேதி விழிப்புணர்வு பேரணிதென்காசியில் 8ம் தேதி விழிப்புணர்வு பேரணி
தென்காசியில் 8ம் தேதி விழிப்புணர்வு பேரணி
தென்காசியில் 8ம் தேதி விழிப்புணர்வு பேரணி
தென்காசியில் 8ம் தேதி விழிப்புணர்வு பேரணி
ADDED : ஆக 05, 2011 04:22 AM
தென்காசி : தென்காசியில் வரும் 8ம் தேதி மாற்றுத் திறனுடைய மாணவர்களின் சேர்க்கை பற்றிய விழிப்புணர்வு பேரணி நடக்கிறது.அனைவருக்கும் கல்வி இயக்கம், ஆய்க்குடி அமர்சேவா சங்கம் இணைந்து மாற்றுத் திறனுடைய மாணவர்களுக்கான ஒருங்கிணந்த கல்வி திட்டம் சார்பில் தென்காசியில் வரும் 8ம் தேதி விழிப்புணர்வு பேரணி நடக்கிறது.
தென்காசி 13வது வார்டு நகராட்சி நடுநிலைப் பள்ளியில் அன்று காலையில் பேரணி துவங்குகிறது. மேலும் 9 மற்றும் 10ம் தேதிகளில் வேன் மூலமாக விழிப்புணர்வு பிரசாரம் நடக்கிறது.இப்பேரணி மற்றும் பிரசாரத்தை தென்காசி வட்டார உதவி மற்றும் கூடுதல் உதவி தொடக்கக்கல்வி அலுவலர்கள், வட்டார வளமைய மேற்பார்வையாளர் துவக்கி வைக்கின்றனர்.