/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/கூடுதலாக பஸ் இயக்காததை கண்டித்து 18ம் தேதி நுகர்வோர் சங்கம் ஆர்ப்பாட்டம்கூடுதலாக பஸ் இயக்காததை கண்டித்து 18ம் தேதி நுகர்வோர் சங்கம் ஆர்ப்பாட்டம்
கூடுதலாக பஸ் இயக்காததை கண்டித்து 18ம் தேதி நுகர்வோர் சங்கம் ஆர்ப்பாட்டம்
கூடுதலாக பஸ் இயக்காததை கண்டித்து 18ம் தேதி நுகர்வோர் சங்கம் ஆர்ப்பாட்டம்
கூடுதலாக பஸ் இயக்காததை கண்டித்து 18ம் தேதி நுகர்வோர் சங்கம் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 14, 2011 10:09 PM
கோத்தகிரி : கோத்தகிரி - மேட்டுப்பாளையம் இடையே கூடுதலாக அரசு பஸ்
இயக்காததை கண்டித்து வரும் 18ம் தேதி, ஆர்ப்பாட்டம் நடத்த நுகர்வோர்
பாதுகாப்பு குழு முடிவு செய்துள்ளது.
கோத்தகிரி புளுமவுண்டன் நுகர்வோர்
பாதுகாப்பு சங்க கூட்டம் நடந்தது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட
தீர்மானங்கள்; கோத்தகிரி - மேட்டுப்பாளையம் இடையே மக்கள் நலன்கருதி,
கூடுதல் பஸ் இயக்க வேண்டும் என, பலமுறை வலியுறுத்தியும் நடவடிக்கை
எடுக்காததை கண்டித்து, வரும் 18ம் தேதி ஆர்பாட்டம் நடத்துவது என்பன உட்பட
பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. செயலர் ராஜன் வரவேற்றார். சங்க தலைவர்
பசுவராஜ் தலைமை வகித்தார். கூடுதல் செயலர் போஜன் நன்றி கூறினார்.


