கர்ப்பிணிகளுக்கு ரூ.12 ஆயிரம்: ஜூன் முதல் கிடைக்க வாய்ப்பு
கர்ப்பிணிகளுக்கு ரூ.12 ஆயிரம்: ஜூன் முதல் கிடைக்க வாய்ப்பு
கர்ப்பிணிகளுக்கு ரூ.12 ஆயிரம்: ஜூன் முதல் கிடைக்க வாய்ப்பு
ADDED : செப் 17, 2011 11:00 PM
தேனி: கர்ப்பிணிகளுக்கான உதவித்தொகை கடந்த ஜூன் முதல், 12 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்பட உள்ளது.
கர்ப்பிணிகளுக்கான உதவித்தொகையை, 6,000 ரூபாயாக தி.மு.க., அரசு வழங்கியது. அ.தி.மு.க., அரசு, இத்தொகையை 12 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க உத்தரவிட்டது. அரசு உத்தரவு, இன்னும் முறைப்படி வெளியாகவில்லை. மே 31 வரை விண்ணப்பித்த அனைவருக்கும், 6 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்க, சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. ஜூன் முதல் தேதிக்குப் பிறகு விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பங்களை நிறுத்தி வைக்குமாறும், அரசு உத்தரவு வந்த பின், அவர்களுக்கு உதவித்தொகை வழங்கலாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.இதன் மூலம், அவர்களுக்கு 12 ஆயிரம் ரூபாய் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.