Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/பொரியல் தட்டை பயிறு விலை உயர்வு

பொரியல் தட்டை பயிறு விலை உயர்வு

பொரியல் தட்டை பயிறு விலை உயர்வு

பொரியல் தட்டை பயிறு விலை உயர்வு

ADDED : ஆக 25, 2011 11:36 PM


Google News
கிணத்துக்கடவு : கிணத்துக்கடவு தினசரி மார்க்கெட்டில், சோனாலி ரக பொரியல் தட்டைபயறுக்கு விலை உயர்ந்துள்ளது.

கிணத்துக்கடவு பகுதியில் தக்காளி சீசன் முடிவடைந்துள்ள நிலையில், பொரியல் தட்டைபயறு சாகுபடி துவங்கியது. இதில், சோனாலி என்ற ரக தட்டைபயறுகளை விவசாயிகள் அதிகளவில் பயிரிட்டுள்ளனர். இதில், நாட்டு தட்டைபயறு காய்ப்பு திறனை காட்டிலும் இரண்டு மடங்கு காய்ப்பு திறன் கிடைப்பதால், விவசாயிகள் அதிகளவில் பொரியல் தட்டைபயறு சாகுபடி செய்துள்ளனர். இதில் இருந்து கிடைக்கும் பொரியல் தட்டைபயறுகளை விவசாயிகள் பறித்து, தினசரி மார்க்கெட்டுக்கு கொண்டு வருகின்றனர். ங்கு நடந்த ஏலத்தில், கேரளா வியாபாரிகள் போட்டி போட்டுக் கொண்டு ஏலம் எடுத்தனர். சோனாலி ரக பொரியல் தட்டைபயறு கிலோ ஒன்றுக்கு அதிபட்சமாக ரூ.12.50க்கும் ஏலம் சென்றது. இந்த ரக சிவப்பு தட்டையபயறு கிலோ ஒன்றுக்கு அதிகபட்சமாக 18 ரூபாய்க்கு ஏலத்தில் சென்றது.போக்குவரத்து நெரிசல்!பொரியல் தட்டைபயறுக்கு கேரளாவில் மவுசு அதிகம் என்பதால், கேரளா வியாபாரிகள் அதிகளவில் இதை விலைக்கு வாங்குகின்றனர். இதனால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us