இடுக்கியில் தொடருது மழை: மண்சரிவால் போக்குவரத்திற்கு தடை
இடுக்கியில் தொடருது மழை: மண்சரிவால் போக்குவரத்திற்கு தடை
இடுக்கியில் தொடருது மழை: மண்சரிவால் போக்குவரத்திற்கு தடை
UPDATED : ஜூலை 17, 2024 04:51 AM
ADDED : ஜூலை 17, 2024 04:50 AM

மூணாறு : கேரளா இடுக்கி மாவட்டத்தில் பலத்த மழையால் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டு மரங்கள் சாய்ந்தன.
இம்மாவட்டத்தில் தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்து மூன்று நாட்களாக கொட்டியது. நேற்று காலை 8:00 மணிப்படி சராசரியாக 130 மி.மீ., மழை பதிவானது. தொடுபுழா, புளியன்மலை மாநில நெடுஞ்சாலையில் கட்டப்பனை நாரககானம் அருகே பாறைகள் உருண்டு ரோட்டில் விழுந்ததால் போக்குவரத்து தடைபட்டது. லோயர் பெரியாறு நீர் மின்நிலையத்தில் மின் வினியோகம் பாதிக்கப்பட்டது.
![]() |
![]() |
மூணாறில் இருந்து பள்ளிவாசல், குஞ்சு தண்ணி, ராஜாகாடு, ராஜகுமாரி வழியாக மாற்று வழியில் பூப்பாறை சென்று தேனி உள்பட பிற பகுதிகளுக்கு வாகனங்கள் சென்று வருகின்றன.
மாவட்டத்தில் கல்லார் குட்டி, பாம்ளா அணைகள் நேற்று முன்தினம் திறக்கப்பட்ட நிலையில் மலங்கரை அணை நேற்று திறக்கப்பட்டது.
1924ல் பருவ மழை தீவிரமடைந்து கொட்டியதில் ஜூலை 15ல் மூணாறு நகர் அழிந்தது. அதே நாளான நேற்று முன்தினம் மழை கொட்டித் தீர்த்ததால் மக்கள் அச்சமடைந்தனர். நேற்று காலை 8:00 மணிப்படி மூணாறில் 24 செ.மீ., மழை பதிவானது. மண் சரிவால் போக்குவரத்து தடை பட்டது. தொழிலாளர்கள் குடியிருப்புகள் ஆபத்தாக உள்ளன.