/உள்ளூர் செய்திகள்/தஞ்சாவூர்/தனியார் பஸ்களின் அறிவிக்கப்படாத கட்டண உயர்வு: பஸ் சிறைபிடிப்புதனியார் பஸ்களின் அறிவிக்கப்படாத கட்டண உயர்வு: பஸ் சிறைபிடிப்பு
தனியார் பஸ்களின் அறிவிக்கப்படாத கட்டண உயர்வு: பஸ் சிறைபிடிப்பு
தனியார் பஸ்களின் அறிவிக்கப்படாத கட்டண உயர்வு: பஸ் சிறைபிடிப்பு
தனியார் பஸ்களின் அறிவிக்கப்படாத கட்டண உயர்வு: பஸ் சிறைபிடிப்பு
ADDED : ஆக 09, 2011 01:37 AM
கும்பகோணம்: கும்பகோணம் தனியார் பஸ்களின் அறிவிக்கப்படாத கட்டண உயர்வால்
ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்று முன்தினம் தனியார் பஸ்சை
சிறைபிடித்தனர்.கும்பகோணத்திலிருந்து வலங்கைமான், வழியாக பட்டுக்கோட்டைக்கு
20க்கும் மேற்பட்ட அரசு பஸ்களும், 15க்கும் மேற்பட்ட தனியார் பஸ்களும்
இயக்கப்பட்டு வருகிறது. கும்பகோணத்திலிருந்து சாக்கோட்டை, பெரியார் நகர்,
மருதாநல்லூர், திப்பிராஜபுரம், மாடாகுடி மற்றும் வலங்கைமான் வரை பஸ்களில்
செல்லும் பயணிகளுக்கு லோக்கல் கட்டணமாக அதாவது குறைந்தபட்ச கட்டணமாக 3.50
ரூபாயை தமிழக அரசு அறிவித்து, அந்த கட்டணத்தை தான் பஸ்கள் கடந்த காலங்களில்
வசூலித்து வந்தனர்.டீசல் விலை உயர்வை காரணம் காட்டி, அரசு பஸ்களில்
அறிவிக்கப்படாமல் 3.50 ரூபாய் கட்டணத்தை நான்கு ரூபாயாக சில பஸ்களில்
வசூலிக்கப்பட்டது.அரசு பஸ்களில் கட்டணம் உயர்த்தப்பட்டதை அறிந்த தனியார்
பஸ் நிர்வாகத்தினரும் தங்களின் கட்டணத்தை நான்கு ரூபாயாக உயர்த்தி, கடந்த
இரண்டு மாதங்களாக வசூல் செய்து வந்தனர்.
இப்படிப்பட்ட சூழலில், கும்பகோணம்-
திருத்துறைப்பூண்டி வழித்தடத்தில் செல்லும் தனியார் பஸ் ஒன்று 3.50 ரூபாய்
கட்டணத்தை திடீரென ஐந்து ரூபாயாக உயர்த்தி, கடந்த ஒரு வாரகாலமாக பயணிகளிடம்
வசூலித்தனர். இதனால் அந்த பஸ்ஸில் பயணம் செய்த பயணிகளுக்கும்,
கண்டக்டர்களுக்கும் அடிக்கடி வாய்தகராறு ஏற்பட்டு வந்தது.நேற்று காலை
கும்பகோணத்திலிருந்து திருத்துறைப்பூண்டி நோக்கி சென்ற தனியார் பஸ்சை
மருதாநல்லூர் காளியம்மன்கோயில் அருகில், அப்பகுதி மக்கள் ஒன்று சேர்ந்து
சண்முகம் என்ற தனியார் பஸ்சை வழிமறித்து சிறைபிடித்தனர். அப்போது பஸ்ஸில்
பயணம் செய்த பயணிகள் அனைவரையும் நடத்துநர் இறக்கிவிட்டு, அடுத்த பஸ்ஸில்
பயணிக்குமாறு தெரிவித்துவிட்டார். இதையடுத்து பயணிகளும் இறங்கி வேறு
வழியில்லாமல் மாற்றுப்பேருந்தை பிடித்து தங்களுடைய ஊர்களுக்கு
சென்றனர்.இதுகுறித்து மருதாநல்லூரைச் சேர்ந்த சக்திவேல் மற்றும் ரவிசங்கர்
ஆகியோர் கூறுகையில், ''கும்பகோணம் வலங்கைமான் வழிதடத்தில் ஏராளமான அரசு,
தனியார் பஸ்கள் செல்கிறது. ஆனால், சில தனியார் பஸ்கள் அதிகளவு கூடுதல்
கட்டணம் வசூலிக்கிறது. அதனால் தான் தனியார் பஸ்சை சிறை பிடித்தோம்,''
என்றனர்.பின், சோழன்மாளிகை வருவாய் ஆய்வாளர் சேகர் மற்றும் அதிகாரிகள்
வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கட்டணத்தை குறைக்க நடவடிக்கை
எடுப்பதாக வாக்குறுதி அளித்தனர். இதையடுத்து நீண்ட நேரம் கழித்து தனியார்
பஸ் விடுவிக்கப்பட்டது.


