ADDED : ஜூலை 24, 2011 02:25 AM
அவிநாசி : பெருமாநல்லூர் அருகே கைத்தறி ரக சேலையை விசைத்தறியில் உற்பத்தி செய்தவர் மீது, வழக்கு
பதிவு செய்து போலீசார் விசாரிக்கின்றனர்.கணக்கம்பாளையத்தை சேர்ந்தவர் நடராஜன் மகன் கனகரத்தினம்; விசைத்தறி வைத்துள்ளார்.
இவர், கைத்தறி ரகத்தில் உற்பத்தி செய்ய வேண்டிய சேலை ரகங்களை, விசைத்தறியில் உற்பத்தி செய்துள்ளார்; தகவலறிந்த கைத்தறி துறை மாவட்ட உதவி இயக்குனர் (ஆய்வு பிரிவு), கணக்கம்பாளையம் சென்று விசாரித்தார். இதுகுறித்து பெருமாநல்லூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார்; போலீசார், கனகரத்தினம் மீது வழக்குபதிவு செய்து விசாரிக்கின்றனர்.


