/உள்ளூர் செய்திகள்/தஞ்சாவூர்/தனிநபர் பொருளாதாரக் கடன்: விண்ணப்பிக்க கலெக்டர் அழைப்புதனிநபர் பொருளாதாரக் கடன்: விண்ணப்பிக்க கலெக்டர் அழைப்பு
தனிநபர் பொருளாதாரக் கடன்: விண்ணப்பிக்க கலெக்டர் அழைப்பு
தனிநபர் பொருளாதாரக் கடன்: விண்ணப்பிக்க கலெக்டர் அழைப்பு
தனிநபர் பொருளாதாரக் கடன்: விண்ணப்பிக்க கலெக்டர் அழைப்பு
தஞ்சாவூர்: 'தஞ்சை மாவட்ட மகளிர் திட்டம் மூலம் பொன்விழா கிராம சுய வேலைவாய்ப்பு திட்டத்தின்கீழ் ஊரக பகுதிகளில் வறுமைக்கோட்டுக்கு கீழ் வசிக்கும் தகுதியுள்ள மாற்றுத்திறனாளிகள் மற்றும் விதவைகளுக்கு 12 ஆயிரம் ரூபாய் அரசு மானியத்துடன் கூடிய கடன் நடப்பாண்டு வழங்கப்படும்' என, கலெக்டர் பாஸ்கரன் தெரிவித்தார்.
பயனாளி மாற்றுத்திறனாளியாக இருப்பின் அடையாள அட்டையின் நகல் விண்ணப்பத்தில் வைக்கப்பட வேண்டும். பயனாளி விதவையாக இருப்பின் தாசில்தாரிடம் பெறப்பட்ட விதவை சான்றிதழுக்கான நகல் விண்ணப்பத்தில் வைக்கப்பட வேண்டும். பயனாளியின் ஆண்டு வருமானம் 24 ஆயிரம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும். விண்ணப்பத்துடன், ரேஷன் கார்டு, பயனாளியின் ஃபோட்டோ கண்டிப்பாக இணைக்கப்பட வேண்டும். கடன் பெற தேவையான அனைத்து விபரங்களுடன் விண்ணப்பத்தினை சம்மந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலரிடம் வரும் ஜுலை 30ம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


