/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/சிறுவர் இலக்கியச் சந்திப்பு நிகழ்ச்சிசிறுவர் இலக்கியச் சந்திப்பு நிகழ்ச்சி
சிறுவர் இலக்கியச் சந்திப்பு நிகழ்ச்சி
சிறுவர் இலக்கியச் சந்திப்பு நிகழ்ச்சி
சிறுவர் இலக்கியச் சந்திப்பு நிகழ்ச்சி
ADDED : ஜூலை 15, 2011 01:09 AM
புதுச்சேரி : சிறுவர் இலக்கிய இயக்கம் சார்பில், சுல்தான்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் சிறுவர் இலக்கியச் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.
அமைப்பாளர் பாரதிவாணர் சிவா நோக்கவுரை ஆற்றினார். 14 வயதிற்கு உட்பட்ட சிறுவர், சிறுமியர்கள் பங்கேற்று, கதை சொல்லுதல், பாடல், விருப்பமான தலைப்பில் பேசுதல், நடிப்பு, செய்தி வாசித்தல் போன்றவற்றில் தங்கள் திறமையை வெளிப்படுத்தினர். ஆசிரியர் ஆறுமுகம், இயக்க பொறுப்பாளர் ராஜேஸ்வரி ஆகியோர், சிறுவர்களை நெறிப்படுத்தினர். சுல்தான்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி பாத்திமா அனிஷா, மிகச் சிறப்பான வகையில் திறமையை வெளிப்படுத்தியதாக தேர்வு செய்யப்பட்டு, குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா நினைவு சுழற்கேடயம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பங்கேற்ற சிறுவர்களுக்கு சான்றிதழ், பரிசு வழங்கப்பட்டது. பள்ளி துணை முதல்வர் விஜயலட்சுமி, விரிவுரையாளர் பாலபாஸ்கரன், அரசு துவக்கப்பள்ளி பொறுப்பாசிரியர் குப்புசாமி ஆகியோர் வழங்கினர்.


