Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கான இடஒதுக்கீடு: தகவல் வெளியாகாததற்கு யார் காரணம்?

நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கான இடஒதுக்கீடு: தகவல் வெளியாகாததற்கு யார் காரணம்?

நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கான இடஒதுக்கீடு: தகவல் வெளியாகாததற்கு யார் காரணம்?

நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கான இடஒதுக்கீடு: தகவல் வெளியாகாததற்கு யார் காரணம்?

ADDED : செப் 25, 2011 12:23 AM


Google News

மாநகராட்சி, நகராட்சிகளுக்கான உள்ளாட்சித் தேர்தலில், இடஒதுக்கீடு, பெண்களுக்கான ஒதுக்கீடு போன்ற விவரங்களை வேண்டுமென்றே மாநில தேர்தல் கமிஷன் மறைத்ததாக, எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

ஆனால், இவ்விஷயத்தில் அரசு நிர்வாகத்தில் ஏற்பட்டுள்ள பிரச்னைகளே காரணம் என்று கூறப்படுகிறது.உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பு, கடந்த 21ம் தேதி வெளியிடப்பட்டது. அதற்கு முன்பாகவே, அனைத்து உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடஒதுக்கீடு, பெண்களுக்கான ஒதுக்கீடு போன்றவற்றை அறிவித்திருக்க வேண்டும்.



எந்தெந்த வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டவை, எவை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான வார்டுகள், எந்தெந்த மேயர் பதவிகள் பெண்களுக்குரியவை, எவை ஆதிதிராவிடர்களுக்கு உரியவை போன்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை.

இதனால், அதிருப்தியடைந்த எதிர்க்கட்சிகள், மாநில தேர்தல் கமிஷன் பாரபட்சமாக நடப்பதாக குற்றம்சாட்டின. முன்னாள் முதல்வர் கருணாநிதி, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் போன்ற தலைவர்கள், நேரடியாக குற்றம் சாட்டினர்.ஆனால், இந்த விவரங்கள் அனைத்தையும் வெளியிட்டிருக்க வேண்டியது, நகராட்சி நிர்வாகத் துறை தான்.

இடஒதுக்கீடு பற்றி இத்துறை விளம்பரம் செய்திருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு செய்யாததற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன.



நகராட்சி நிர்வாகத் துறை செயலர், சொந்த காரணங்களுக்காக விடுமுறையில் சென்றிருந்தார். நகராட்சி நிர்வாக கமிஷனராக இருந்த செந்தில்குமார், ஒரு வாரத்துக்கு முன் மாற்றப்பட்டு, சந்திரகாந்த் காம்ளே புதிய கமிஷனராக நியமிக்கப்பட்டார்.

ஒரு வாரத்தில் தேர்தல் உள்ள நிலையில், புதிதாக வந்த அதிகாரியால், அதற்கு ஏற்ப தயாராவது கடினம் தான்.



மேலும், இத்துறையில் உள்ள முக்கிய அதிகாரிகள் அனைவரும், முந்தைய ஆட்சியில் இருந்து தொடர்ந்து அதே பதவியில் இருப்பவர்கள்.ஆதிதிராவிடர்களுக்கான இடஒதுக்கீடு, பெண்களுக்கான ஒதுக்கீடு போன்ற விவரங்கள் தொடர்பாக அரசாணை பிறப்பித்து, அதை செய்தியாக வெளியிட்டிருக்க வேண்டும். அவ்வாறு செய்யாததால், கடைசி நேரம் வரை குழப்பம் நீடித்தது. சென்னை மாநகராட்சி மட்டும், தனது வார்டுகளுக்கான இடஒதுக்கீட்டை வெளியிட்டது.அதேநேரத்தில், கிராம பஞ்சாயத்துகள், ஒன்றியங்கள், மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர்கள் ஆகிய பதவிகளுக்கான இடஒதுக்கீடு பற்றிய அறிவிப்பை அத்துறை ஏற்கனவே வெளியிட்டுவிட்டது.



இதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டு, அரசிதழிலும் வெளியிடப்பட்டது. இதனால், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பதவிகளுக்கான இடஒதுக்கீடு தொடர்பாக, இவ்வாறு செய்யாதது ஏன்? என்ற கேள்வி எழுந்துள்ளது.பிரச்னை இவ்வாறு இருக்க, மூன்று மாதங்களுக்கு முன்பு வரை ஆளுங்கட்சியாக இருந்து, வார்டு பிரிப்பு போன்ற பணிகளை மேற்கொண்ட தி.மு.க.,வே, மாநில தேர்தல் கமிஷன் மீது குற்றம்சாட்டி இருப்பது ஆச்சரியத்தை அளித்துள்ளது.பா.பாஸ்கர்பாபு-







      Our Apps Available On




      Dinamalar

      Follow us