Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/சென்னையில் ஐ.ஓ.பி., மாநாடுபுதுச்சேரி அதிகாரிகள் பங்கேற்பு

சென்னையில் ஐ.ஓ.பி., மாநாடுபுதுச்சேரி அதிகாரிகள் பங்கேற்பு

சென்னையில் ஐ.ஓ.பி., மாநாடுபுதுச்சேரி அதிகாரிகள் பங்கேற்பு

சென்னையில் ஐ.ஓ.பி., மாநாடுபுதுச்சேரி அதிகாரிகள் பங்கேற்பு

ADDED : செப் 16, 2011 03:21 AM


Google News
புதுச்சேரி:இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பின் 21 வது மூவாண்டு கால மாநாடு நாளை (17ம் தேதி) துவங்குகிறது.இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பின் 21 வது மூவாண்டு கால மாநாடு நாளை 17 மற்றும் நாளைமறுநாள் 18ம் தேதிகளில் சென்னையில் நடக்கிறது.மாநாட்டை சீதாராம் ஏச்சூரி எம்.பி., துவக்கி வைக்கிறார்.

நிகழ்ச்சியில் வங்கியின் மேலாண் இயக்குனர் நரேந்திரா, செயல் இயக்குனர்கள் மித்ரா, பன்சால், ஏஐபிஓசி பொது செயலாளர் நடாப், ஏ.ஐ.ஓ.பி.இ.யூ., தலைவர் பாலசுப்ரமணியன், பொது செயலாளர் சீனுவாசன் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர்.மாநாட்டு ஏற்பாடுகளை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பின் தலைவர் சர்மா, பொது செயலாளர் ஆனந்தகுமார் ஆகியோர் செய்து வருகின்றனர்.மாநாட்டில் புதுச்சேரி மண்டல அலுவலகத்தின் முதன்மை மண்டல மேலாளர் பார்த்தசாரதி, மண்டல வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பின் உதவி பொது செயலாளர் பிரேம்ராஜ், வங்கி மேலாளர்கள் கிரி, கேசவன், முத்துசிதம்பரம், கிருஷ்ணமூர்த்தி, முதுநிலை மேலாளர் மோகன்குமார் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.அகில இந்திய அளவில் பணியாற்றும் 10433 அதிகாரிகளும், 5000 உறுப்பினர்களும் மாநாட்டில் கலந்து கொள்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us