ADDED : ஆக 21, 2011 02:29 AM
காவேரிப்பட்டணம்: காவேரிப்பட்டணம் அருகே இரு பைக் மோதிய விபத்தில் மின்வாரிய ஊழியர் பலியானார்.
காவேரிப்பட்டணம் அகரம் ரோட்டை சேர்ந்தவர் சடகோபன் (45).
இவர் பர்கூர் ஜெகதேவியில் மின்வாரியத்தில் லைன் மேனாக பணிபுரிந்து வந்தார். இவர் நேற்று முன்தினம் பைக்கில் காரிமங்கலம் பைபாஸ் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். சப்பாணிபட்டி அருகே சென்றபோது எதிரே வந்த மற்றொரு பைக் மீது மோதியது. இதில், சடகோபன் மற்றும் எதிரே பைக்கில் வந்த ராஜா, மாதேஷ் ஆகியோர் படுகாயமடைந்து கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதில், சிகிச்சை பலனின்றி சடகோபான் பரிதாபமாக இறந்தார். காவேரிப்பட்டணம் இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் விசாரிக்கிறார்.


