/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/இட நெருக்கடியில் மாநகராட்சி குப்பைக்கிடங்கு வேறு இடம் தேட வேண்டிய கட்டாயம்இட நெருக்கடியில் மாநகராட்சி குப்பைக்கிடங்கு வேறு இடம் தேட வேண்டிய கட்டாயம்
இட நெருக்கடியில் மாநகராட்சி குப்பைக்கிடங்கு வேறு இடம் தேட வேண்டிய கட்டாயம்
இட நெருக்கடியில் மாநகராட்சி குப்பைக்கிடங்கு வேறு இடம் தேட வேண்டிய கட்டாயம்
இட நெருக்கடியில் மாநகராட்சி குப்பைக்கிடங்கு வேறு இடம் தேட வேண்டிய கட்டாயம்
ஈரோடு: இட நெருக்கடியால் தவிக்கும், ஈரோடு மாநகராட்சி குப்பைக் கிடங்குக்கு வேறு இடம் தேட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
காசிபாளையம், வீரப்பன்சத்திரம், பெரியசேமூர், சூரம்பட்டி ஆகிய நகராட்சிகள், சூரியம்பாளையம், பி.பி.அக்ரஹாரம் ஆகிய டவுன் பஞ்சாயத்துகள் மற்றும் ஐந்து பஞ்சாயத்துகள் மாநகராட்சியுடன் இணையவுள்ளன. வீரப்பன்சத்திரத்துக்கு மட்டுமே நிலையான குப்பைக்கிடங்கு உள்ளது. மாநகராட்சி எல்லை விரிவடைவதால், சேகரிக்கப்படும் குப்பை அளவு பல ஆயிரம் டன்னாக உயரும். இதனால், வெண்டிபாளையம் குப்பைக் கிடங்குக்கு மாற்று ஏற்பாடு செய்வது இன்றியமையாத ஒன்றாகியுள்ளது. புதிய குப்பை மற்றும் உரக்கிடங்கு அமைக்க குறைந்தபட்சம் 30 முதல் 50 ஏக்கர் பரப்பளவு உள்ள நிலம் தேவை. அந்தளவுக்கு நிலம் ஈரோடு புறநகர் பகுதியில் இல்லை. விரிவடைந்து வரும் குடியிருப்புகளால், எங்கு குப்பை கொட்டினாலும் எதிர்ப்பு வலுக்கும். எனவே, இங்கு குப்பையை அழித்திடும் வகையில் சிறப்பான திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த வேண்டும். இவ்விஷயத்தில் மாநகராட்சி நிர்வாகம் உடனடி கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்காவிட்டால், சுகாதார சீர்கேடு உள்ளிட்ட பல்வேறு இன்னல்களுக்கு மாநகர மக்கள் ஆளாக வேண்டிய நிலை ஏற்படும்.