/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/உள்ளாட்சி தேர்தல் பணிக்கு தேர்தல் அலுவலர்கள் நியமனம்உள்ளாட்சி தேர்தல் பணிக்கு தேர்தல் அலுவலர்கள் நியமனம்
உள்ளாட்சி தேர்தல் பணிக்கு தேர்தல் அலுவலர்கள் நியமனம்
உள்ளாட்சி தேர்தல் பணிக்கு தேர்தல் அலுவலர்கள் நியமனம்
உள்ளாட்சி தேர்தல் பணிக்கு தேர்தல் அலுவலர்கள் நியமனம்
ADDED : செப் 21, 2011 11:12 PM
சிவகங்கை : உள்ளாட்சி தேர்தல் பணியை கண்காணிக்க தேர்தல் அலுவலர், உதவி தேர்தல் அலுவலர்களை மாவட்ட நிர்வாகம் நியமனம் செய்துள்ளது.உள்ளாட்சி தேர்தல் பணிக்கான ஆயத்த வேலைகளை மாவட்ட நிர்வாகம் துவக்கியுள்ளது.
உள்ளாட்சி தேர்தலை கண்காணிக்க தேர்தல் அலுவலர்கள், உதவி தேர்தல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மாவட்ட ஊராட்சியில் உள்ள 16 வார்டுகளுக்கும் 2 தேர்தல் நடத்தும் அதிகாரிகளும், 16 உதவி தேர்தல் அதிகாரிகளும் நியமிக்கப்பட்டள்ளனர். மாவட்டத்தில் உள்ள 12 யூனியன்களுக்கு 12 தேர்தல் அதிகாரிகளும், 30 உதவி தேர்தல் அதிகாரிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர். 445 கிராம ஊராட்சிகளுக்கு என 12 தேர்தல் அலுவலர்களும்,78 உதவி தேர்தல் அலுவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.மாவட்டத்தில் 3 நகராட்சிகளுக்கு அந்தந்தந்த கமிஷனர்களே தேர்தல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு கண்காணிப்பாளர் நிலையில் 10 அலுவலர்கள் உதவி தேர்தல் அலுவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.தேர்தலுக்கு புதிதாக நகராட்சி தலைவர் பணிக்கென தனியாக உதவி தேர்தல் அலுவலரை நியமிக்க கமிஷன் உத்தரவிட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள பேரூராட்சியில் 12 உறுப்பினர்களுக்கு 3 தேர்தல் அலுவலரும், ஒவ்வொரு சேர்மனுக்கும் தனித்தனியாக 12 உதவி தேர்தல் அலுவலரும் நியமிக்கப்பட்டுள்ளனர். தேர்தல் பணிக்கென 41 தேர்தல் அலுவலர்களும், 618 உதவி தேர்தல் அலுவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். வேட்புமனு படிவம், வாக்காளர் பட்டியல், மற்றும் தேர்தல் சம்பந்தமான படிவங்கள் தேர்தல் பிரிவிற்கு வந்துள்ளன.மாவட்ட உதவி தேர்தல் அதிகாரி சர்புதின் கூறுகையில்,தேர்தல் கமிஷன் தேர்தல் தேதி அறிவிப்பு செய்யப்பட்டதும் மனுக்கள் வாங்க அதிகாரிகள் தயார் நிலையில் உள்ளனர்.தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினகளுக்கு மட்டும் வாக்காளர் பட்டியல், மற்றும் வாக்குசாவடி பட்டியல் இலவசமாக வழங்கப்படும். மற்றவர்கள் பக்கத்திற்கு 5 ரூபாய் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம். சட்டசபை தேர்தல் தொடர்பாக வழக்கு நிலுவையில் உள்ளதால் மாவட்டத்தில் வைக்கப்பட்டுள்ள ஓட்டு இயந்திரங்களை பயன்படுத்த முடியாது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஓட்டு இயந்திரங்கள் பயன்படுத்தப்படும்,'' என்றார்.