ADDED : ஆக 20, 2011 11:48 PM
உடுமலை:உடுமலை-பொள்ளாச்சி வழித்தடத்திலிருந்து, வேறு பகுதிக்கு மாற்றப்பட்ட
டவுன் பஸ்சை, மீண்டும் இயக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.
உடுமலையிலிருந்து பொள்ளாச்சி செல்லும் வழித்தடத்தில், பூலாங்கிணறு,
முக்கோணம், சடையகவுண்டன்புதூர் உட்பட 15க்கும் அதிகமான கிராமங்கள் உள்ளன;
இப்பகுதியினர், பொள்ளாச்சி செல்ல டவுன் பஸ்களை மட்டுமே நம்பியுள்ளனர்.
இந்நிலையில், வழித்தடத்தில் இயக்கப்பட்டு வந்த வழித்தட எண் 7 ஏ/51 பஸ்,
முன்னறிவிப்பின்றி, வேறு வழித்தடத்தில் மாற்றி விடப்பட்டது. மாலை 4.50
மணிக்கு வந்து கொண்டிருந்த பஸ், பள்ளி மாணவ, மாணவியருக்கு பயன்பட்டு
வந்தது. இந்த வழித்தடத்தில், பஸ்சை மீண்டும் இயக்க வேண்டும் என கோரிக்கை
விடப்பட்டுள்ளது.


