ADDED : செப் 25, 2011 09:59 PM
ஸ்ரீவில்லிபுத்தூர்:ஸ்ரீவில்லிபுத்தூர் திருவண்ணாமலை சீனிவாச பெருமாள்
கோயிலில் புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு, நேற்று சிறப்பு வழிபாடு
நடந்தது.
இதையொட்டி அதிகாலை 3.30 மணிக்கு நடை திறப்பு, மதியம் 12 மணிக்கு அபிஷேகம், பிற்பகல் 2மணிக்கு கருடாழ்வார் வீதியுலா நடந்தது.
மதுரை, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களிலிருந்து ஏராளமான
பக்தர்கள் கலந்து கொண்டனர்.போலீசாரும் பாதுகாப்பு பணியில்
ஈடுபடுத்தப்பட்டனர். ராஜபாளையம், சிவகாசி, வத்திராயிருப்பு,
அருப்புக்கோட்டை, காரியாப்பட்டி போன்ற பகுதிகளிலிருந்து சிறப்பு பஸ்களும்
இயக்கப்பட்டன.